மின் கம்பியில் படர்ந்துள்ள செடி, கொடியால் விபத்து அபாயம்
ஸ்ரீபெரும்புதுார் -- சிங்கபெருமாள் கோவில் சாலை, வண்டலுார் -- வாலாஜாபாத் சாலைகள் சந்திக்கும் பகுதி யான ஒரகடத்தில் மேம்பாலம் அமைந்துஉள்ளது.மேம்பாலம் அருகே உள்ள மின்கம்பத்தில்செடி, கொடிகள் படர்ந்து மின் கம்பியில் சூழ்ந்து உள்ளது. இதனால், மின் கம்பி ஒன்றோடு ஒன்று இணைந்து, மின் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மின் கம்பியில் படர்ந்துள்ள, செடி, கொடிகளை அகற்ற, ஒரகடம் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சி. தாமோதரன்,ஒரகடம்.