புகார் பெட்டி :சேதமான மின்கம்பத்தால் விபத்து அபாயம்
திருவாலங்காடு ஒன்றியம் தொழுதாவூர் கிராமத்தில் அம்பேத்கர் தெருவில் உள்ள மின்கம்பம் சேதமடைந்து உள்ளது. சிறிய அளவிலான காற்று வீசினாலே மின்கம்பம் உடைந்து விழுந்து விபத்தை ஏற்படுத்தும் நிலை உள்ளது.ஆபத்து ஏற்படும் முன், மின்கம்பத்தை மாற்றியமைக்க மின்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கே.பிரபு, தொழுதாவூர்.