தெருநாய்களால் தொல்லை: ஊத்துக்கோட்டையில் பீதி
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், திருவள்ளூர் சாலை, நாகலாபுரம் சாலை, அம்பேத்கர் நகர் ஆகிய பகுதிகளில், தெரு நாய்கள் கூட்டம் கூட்டமாக சுற்றி திரிகின்றன. இருசக்கர வாகனம், நடந்து செல்வோரை நாய்கள் கடிக்க துரத்துகின்றன. இதனால், சாலையில் நடந்து செல்ல முடியாத நிலை உள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். - வி.சோமசுந்தரம், ஊத்துக்கோட்டை.