மேலும் செய்திகள்
மின் நுகர்வோர் குறைதீர் முகாம்
08-Apr-2025
திருத்தணி:திருத்தணி - அரக்கோணம் சாலை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில், நாளை மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம், நண்பகல் 11:00 முதல் மதியம் 1:30 மணி வரை நடைபெறுகிறது.இந்த கூட்டத்தில் மின் கட்டணம், பழுதடைந்த மின் மீட்டர் மற்றும் மின்கம்பம், குறைந்த மின் அழுத்தம் போன்ற பல்வேறு பிரச்னைகள் குறித்து புகார் தெரிவிக்கலாம்.எனவே, திருத்தணி நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மின்நுகர்வோர்கள், கூட்டத்தில் பங்கேற்று தங்களது பிரச்னைகளை தெரிவித்து கொள்ளலாம் என, திருத்தணி மின்வாரிய செயற்பொறியாளர் பாஸ்கரன் தெரிவித்தார்.
08-Apr-2025