உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் / பெண் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியவர் கைது

பெண் நிர்வாண வீடியோவை வெளியிடுவதாக மிரட்டியவர் கைது

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், குள்ளனுாரை சேர்ந்த வெண்ணிலா, 48, என்பவர், 'பியூட்டி பார்லர்' நடத்தி வருகிறார். அவரிடம், அதே பகுதியை சேர்ந்த சமீரா, 33, என்பவர், 10 ஆண்டுகளுக்கு மேலாகவும், அவரது கணவர் சிராஜ்தீன், 36, கார் டிரைவராக, மூன்றுஆண்டுகளாகவும் பணியாற்றினர். வெண்ணிலாவின் கணவர், 15 ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டதால், ஓராண்டிற்கு முன், மாரிகிருஷ்ணன் என்பவரை, இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். மாரிகிருஷ்ணனிடம், வெண்ணிலா பற்றி, தவறாக சிராஜ்தீன் கூறினார். சிராஜ்தீனை, வெண்ணிலா தட்டிக்கேட்டார். அதையடுத்து, சிராஜ்தீன், சமீரா இருவரையும், வேலையை விட்டு வெண்ணிலா நிறுத்தினார். அந்த ஆத்திரத்தில், சிராஜ்தீன், 'பியூட்டி பார்லரில், நீ நிர்வாணமாக இருந்ததை, நான் வீடியோவாக எடுத்து வைத்துள்ளேன். அதை, சமூக வலைதளத்தில் பரப்புகிறேன்' என, மிரட்டல் விடுத்தார். வெண்ணிலா புகாரில், போச்சம்பள்ளி போலீசார், சிராஜ்தீனை நேற்று காலை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை