மேலும் செய்திகள்
நோயாளிகளை அச்சுறுத்தும் குரங்குகள்
20-Jan-2025
திருத்தணி,திருத்தணி ஒன்றியம், கார்த்திகேயபுரம் மோட்டூர் கிராமத்தில், சமீபமாக குரங்குகள் தொல்லை அதிகரித்துள்ளது. நேற்று, 10க்கும் மேற்பட்ட குரங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்கு சென்று மக்களை துரத்தி கடித்தன. இதில், 10 முதல் 65 வயதுடைய 12 பேர் காயமடைந்தனர். அவர்கள், திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.'குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும்' என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
20-Jan-2025