பாதாள சாக்கடையில் அடைப்பு சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
காஞ்சிபுரம், காஞ்சிபுரம், ஐதர்பட்டரை தெருவில், பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு, நான்கு நாட்களாக சாலையில் கழிவுநீர் வழிந்தோடி வருகிறது. இதனால், இப்பகுதியில் உள்ள ரேஷன் கடை, யதோக்தகாரி பெருமாள் கோவில், கோபால்சாமி தோட்டம் உள்ளிட்ட பகுதிக்கு செல்வோர் கழிவுநீரில் நடந்து செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.தொடர்ந்து வெளியேறும் கழிவுநீரால், இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, ஐதர்பட்டரை தெருவில், பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை முழுதும் நீக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.