உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / டீ கடை பெஞ்ச் /  கூட்டுறவு பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

 கூட்டுறவு பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி

காஞ்சிபுரம்: கூட்டுறவு பணியாளர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி நேற்று நடந்தது. காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகத்தில், நேற்று நடந்த திறன் மேம்பாட்டு பயிற்சி முகாமிற்கு, காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் யோகவிஷ்ணு தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற கூட்டுறவு சார் - பதிவாளர் ரகுராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, பயிர் கடன், கால்நடை கடன், மகளிர் சுய உதவி குழு கடன் உள்ளிட்ட பல்வேறு விதமான கடன் வழங்குவது மற்றும் வசூலிப்பது குறித்து எடுத்துரைத்தார். காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி மேலாளர் சீனிவாசன் உள்ளிட்ட கூட்டுறவு துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை