தகவல் சுரங்கம் : பறவைகள் தினம்
தகவல் சுரங்கம்பறவைகள் தினம்பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல. அனைத்து உயிரினங்களுக்கும் சொந்தமானது. பறவைகள் தான் உண்ணும் தானியம், பழங்களை, தன் எச்சத்தின் வாயிலாக மண்ணில் வளரச் செய்து பூமியில் பசுமைப் போர்வையை உருவாக்குகிறது. தாவரங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பூச்சியினங்களை, இரையாக்கி கட்டுப்படுத்துவதால் பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவுகிறது. பறவைகளை பாதுகாக்க வலியுறுத்தி ஜன. 5ல் தேசிய பறவைகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவில் 30 ஆண்டுகளில் 60 சதவீத பறவைகள் அழிவை சந்தித்துள்ளன என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.