உள்ளூர் செய்திகள்

அக்ரிகல்சர் முடித்தவருக்கு விதை நிறுவனத்தில் வாய்ப்பு

தேசிய விதைகள் நிறுவனத்தில் (என்.எஸ்.சி.எல்.,) காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. டிரைய்னி 179 (விவசாயம் 68, மார்க்கெட்டிங் 33, டெக்னீசியன் 21, ஸ்டெனோகிராபர் 15 உட்பட)மேனேஜ்மென்ட் டிரைய்னி 5, விஜிலென்ஸ் 4 என மொத்தம் 188 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: பெரும்பாலான பணிக்கு பி.எஸ்சி., அக்ரிகல்சர்,மற்ற பிரிவுக்கு எம்.பி.ஏ., / பி.இ., / டிப்ளமோ.வயது: 27க்குள் (30.11.2024ன் படி)தேர்ச்சி முறை: ஆன்லைன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு.விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.விண்ணப்பக்கட்டணம்: ரூ.500. எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு கட்டணம் இல்லை. கடைசிநாள்: 30.11.2024விவரங்களுக்கு: indiaseeds.com


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !