உள்ளூர் செய்திகள்

டிராகன் பழ நாற்று திருவள்ளூரில் உற்பத்தி

டிராகன் பழம் நாற்று விற்பனை குறித்து, திருவள்ளூர் மாவட்டம், கொத்துார் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கே.வெங்கடபதி கூறியதாவது:பிற நாடுகளில் விளையும் டிராகன் பழத்தை, நம்மூரில் சாகுபடி செய்துள்ளேன். குறிப்பாக, தமிழகத்தில் டிராகன் பழம் சாகுபடி கிடையாது. ஆந்திர மாநிலத்தில் சில விவசாயிகள் சாகுபடி செய்து, 1 ஏக்கருக்கு, 5 டன் வரையில் மகசூல் எடுக்கின்றனர்.ஆந்திராவில் இருந்து, ஒரு செடி எடுத்து வந்து, அதில் தேவைக்கு ஏற்ப நாற்றுகளை பதியம் போட்டு, 1 ஏக்கரில் நட்டுள்ளேன். அவை, சில மாதங்களில் அறுவடைக்கு வந்து விடும்.விவசாயிகளின் நலன் கருதி, டிராகன் பழம் நாற்றுகளை உற்பத்தி செய்துள்ளேன். ஒரு செடி, 70 ரூபாய்க்கு கிடைக்கும்.இவ்வாறு, அவர் கூறினார்.தொடர்புக்கு: 93829 61000


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !