உள்ளூர் செய்திகள்

மலை மண்ணில் சாகுபடியாகும் தங்க நிற நாம் டோக் மாயி பழம்

தங்க நிற 'நாம் டோக் மாயி' ரக மாம்பழம் சாகுபடி குறித்து, திருவள்ளூர் மாவட்டம் ஸ்ரீகாளிகாபுரம் கிராமத்தைச் சேர்ந்த எம்.ராஜிவ்காந்தி கூறியதாவது:மா, பலா, கொய்யா உள்ளிட்ட பலவித பழ மரங்களை தோட்டத்தில் பயிரிட்டுள்ளேன். இதுதவிர, வேங்கை, தேக்கு, மகோகனி, ஈட்டி உள்ளிட்ட மரப்பொருட்கள் செய்யும் மரங்களை சாகுபடி செய்துள்ளேன்.அந்த வரிசையில், தாய்லாந்து நாட்டில் விளையும், நாம் டோக் மாயி என, அழைக்கப்படும் தங்க நிற மாம்பழம் சாகுபடி செய்துள்ளேன். இது, மாடி தோட்டங்கள் மற்றும் விளைநிலங்களில் சாகுபடி செய்யலாம். பிற ரக மாம்பழங்களை போல இல்லாமல், இரு சீசன்களில் மகசூல் தரும். குறிப்பாக, தங்க நிற நாம் டோக் மாயி மாம்பழத்தின் காய்கள் நீளமாகவும், பழம் தங்க நிறத்திலும் இருக்கும்.ஒரு மாம்பழம், 300 கிராம் வரையில் எடை இருக்கும். இது, பிற மாம்பழங்களை காட்டிலும், அதிக சுவையுடன் இருப்பதால், சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யலாம். பழத்தை ருசித்த பின், கூடுதல் விலை கொடுத்து வாங்க மக்கள் தயக்கம் காட்டமாட்டர்.இவ்வாறு அவர் கூறினார். தொடர்புக்கு: எம்.ராஜிவ்காந்தி,89402 22567.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !