உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  50 சதவீத அபராதம் தள்ளுபடி வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி

 50 சதவீத அபராதம் தள்ளுபடி வாகன ஓட்டிகளுக்கு நற்செய்தி

பெங்களூரு: மாநிலம் முழுதும் போக்குவரத்து விதிகளை மீறும் வாகனங்கள் மீது அபராதம் விதிக்கப்படும். இப்படி வாகனங்கள் மீது விதிக்கப்பட்ட அபராத தொகையில், 50 சதவீதம் தள்ளுபடி வழங்குவதாக மாநில போக்குரவத்துத் துறை இணை செயலர் ரங்கப்பா அறிவித்துள்ளார். இன்று முதல் அடுத்த மாதம் 12ம் தேதி வரை 50 சதவீதம் தள்ளுபடியில் அபராத தொகையை செலுத்தலாம். அபராத தொகையை பி. டி.பி., அஸ்ட்ரம், செயலி, அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்கு சென்று செலுத்தலாம். இந்த வாய்ப்பை பயன்படுத்தி வாகன ஓட்டிகள், தங்கள் வாகனங்களில் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை நீக்கிக் கொள்ள முடியும். இதன் மூலம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டலாம் என, மாநில அரசு திட்டமிட்டு உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்