உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  6 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் 2 தமிழர்களுக்கு முக்கிய பொறுப்பு

 6 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் 2 தமிழர்களுக்கு முக்கிய பொறுப்பு

பெங்களூரு: கர்நாடகாவில் 6 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இரண்டு தமிழ் அதிகாரிகளுக்கு முக்கிய பொறுப்பு கிடைத்துள்ளது.  காத்திருப்போர் பட்டியலில் இருந்த அஞ்சும் பர்வேஸ், வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் கூடுதல் தலைமை செயலராக நியமனம்.  ஜி.பி.ஏ.,வின் நிர்வாகம், வருவாய், தகவல் தொழில்நுட்ப துறை சிறப்பு கமிஷனராக பணியாற்றிய முனிஷ் மவுத்கில், முதல்வரின் முதன்மை செயலராக நியமனம்.  நகர்ப்புற மேம்பாட்டு துறை செயலர் தீபா சோழன், போக்குவரத்து துறை செயலராக நியமனம்.  காத்திருப்போர் பட்டியலில் இருந்த காவேரி, நகர்ப்புற மேம்பாட்டு துறை செயலராக நியமனம்.  திட்டம், புள்ளியியல் துறை செயலர் வெங்கடேஷ், பெங்களூரு கூட்டுறவு சங்க பதிவாளராக நியமனம்.  கர்நாடக நகர பகுதி குடிநீ ர் வழங்கல் துறையின் நிர்வாக இயக்குநர் செல்வமணி, போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு கமிஷனராக நியமனம். இவர்களில் தீபா சோழனும், செல்வமணியும் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை