உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / குமாரசாமி நிலத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

குமாரசாமி நிலத்தில் அதிகாரிகள் திடீர் ஆய்வு

பெங்களூரு: மத்திய கனரக தொழில் அமைச்சர் குமாரசாமி ஆக்கிரமித்ததாக கூறப்படும் நிலத்தில், நில அளவை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினர்.ராம்நகர் பிடதி அருகே கேட்டகானஹள்ளி கிராமத்தில் அரசுக்கு சொந்தமான 14 ஏக்கர் நிலத்தை, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி, அவரது குடும்பத்தினர் ஆக்கிரமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.இதுகுறித்து லோக் ஆயுக்தா விசாரணை நடத்தி அரசிடம் அறிக்கை தாக்கல் செய்த போதும், குமாரசாமி மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் அரசின் தலையில், உயர் நீதிமன்றம் குட்டியது.விசாரணைக்கு ஆஜரானபோது, வருவாய்த்துறை முதன்மை செயலர் ராஜேந்திர கட்டாரியாவை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்தது.இதன் பின் அரசு, நில ஆக்கிரமிப்பு புகாரை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தது. பெங்களூரு மண்டல கமிஷனர் அமலன் ஆதித்யா தலைமையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.நேற்று கேட்டகானஹள்ளி கிராமத்தில், நில அளவை அதிகாரிகள் திடீரென ஆய்வு நடத்தினர். டேப்பை வைத்து நிலத்தை அளந்தனர். பின், அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
பிப் 18, 2025 08:22

இது கட்சியில் மாஜி தலைவர் இப்போது கர்நாடகாவின் முதல்வருக்கும் இவருக்கும் நடக்கும் பனிப்போர் இல்லை இல்லை நில அபகரிப்பு போர் இருவருமே முடிந்த அளவிவிற்க்கு அவரவர்கள் ஆண்ட பொது ஆளும்போது நிலங்களை அபகரிப்பதில் மன்னர்கள் இவர்களுக்கு ஈடு யாருமே கிடையாது முதலில் சித்துசெய்த சித்துராமையாவின் 14 ஏக்கர் நில ஆபகரிப்பை முதலில் எடுத்துவிட்டு இதை ஆரம்பிக்கலாமே