உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஆட்டோ ஓட்டுநரிடம் அநாகரீகம் வட மாநில தம்பதி அட்ராசிட்டி

 ஆட்டோ ஓட்டுநரிடம் அநாகரீகம் வட மாநில தம்பதி அட்ராசிட்டி

பெங்களூரு: ஆட்டோ ஓட்டுநரை அநாகரீகமாக பேசிய வட மாநில தம்பதி மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். பெங்களூரில் ஆட்டோ ஓட்டுநர்களிடம் வட மாநிலத்தை சேர்ந்த ஹிந்தி பேசும் நபர்கள் சண்டையிடுவது குறித்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாவது வாடிக்கையாகிவிட்டது. சில்லறை பிரச்னைக்கு கூட ஓட்டுநர்களிடம் இவர்கள் மிகவும் மோசமாக நடந்து கொள்கின்றனர். இந்த வரிசையில் புதிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஹிந்தி பேசும் தம்பதி, ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், சரியான இடத்தில் இறக்கிவிடவில்லை என கூறி, அநாகரீகமாக பேசத்துவங்கினர். 'எங்களை குறிப்பிட்ட இடத்தில் நிறுத்தவில்லை. உன்னை நிர்வாணமாக்கி சாலையிலேயே உதைப்போம்' என, அவர்கள் முறையின்றி பேசுகின்றனர். அதுமட்டுமின்றி ஆட்டோவை சேதப்படுத்த தம்பதி முயற்சித்தனர். இந்த தம்பதி மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பலரும் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ngm
நவ 13, 2025 05:16

auto fellows are rowdy. not just 1 side stories. need to check both the sides. these auto fellows in chennai simply demanding double than what was mentioned in uber or ola. else they'll ask us to cancel. if not they won't cancell and we have to loose time. worst ppl.


புதிய வீடியோ