உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  முதல்வர் - அசோக் நகைச்சுவை வாதம்

 முதல்வர் - அசோக் நகைச்சுவை வாதம்

பெங்களூரு: நேற்று சட்டசபையில் முதல்வருக்கும், எதிர்க்கட்சி தலைவருக்கும் இடையே நடந்த நகைச்சுவை கலந்த வாக்குவாதம். முதல்வர் சித்தராமையா: எனக்கு பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் உடன்பாடு இல்லை. எதிர்க்கட்சி தலைவர் அசோக்: ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளை உங்களை யாரும் ஏற்க சொல்லவில்லையே. நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள். சித்தராமையா அனைத்து கட்சிக்கும் சென்று வந்தவர். சித்தராமையா: நான் ஆர்.எஸ்.எஸ்., கட்சிக்கு சென்றதில்லையே. அசோக்: ஆர்.எஸ்.எஸ்., கட்சி இல்லை. அது ஒரு அமைப்பு. இது, அவையில் சிரிப்பை ஏற்படுத்தியது. இதனால், சித்தராமையா அடுத்து என்ன பேசுவது என தெரியாமல் விழித்தார். முன்னதாக, சபாநாயகர் இருக்கை முன் போராட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ., உறுப்பினர்களை பார்த்து காங்கிரஸ் உறுப்பினர் சிவலிங்க கவுடா பேசுகையில், ''டேய் ஆர்.எஸ்.எஸ்., மானம், மரியாதை இருக்குதா, இல்லையா. சட்டசபைக்கு எதற்கு வந்து உள்ளீர்கள். நடனம் ஆடுவதற்கா. சட்டசபையில் நடனம் ஆடலாமா. எதிர்க்கட்சி தலைவரே என்ன மிமிக்கிரி செய்து கொண்டிருக்கிறீர்களா,” என கடுமையான வார்த்தைகளை உபயோகித்தார். காங்., --- ரங்கநாத்: சாமி பேசும் போது, பா.ஜ.,வினர் கோவிந்தா கோவிந்தா என கோஷம் எழுப்பியது அவையில் சிரிப்பை ஏற்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ