உள்ளூர் செய்திகள்

சினி கடலை

பாடலுக்கு வரவேற்புயுவா ராஜ்குமார் நாயகனாக நடித்துள்ள, எக்கா திரைப்படத்தின் பாடல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இது தொடர்பாக, படக்குழுவினர் கூறுகையில், 'பாடலில் யுவராஜ் குமார், சஞ்சனா ஆனந்த் ஆட்டம் போட்டுள்ளனர். நாகார்ஜுன் சர்மா எழுதிய பாடலுக்கு, சரண் ராஜ் இசை அமைத்துள்ளார்.'படத்தில் யுவா ராஜ்குமார், மிரட்டலான வேடத்தில் தென்படுகிறார். சண்டைக் காட்சிகளில் அசத்தியுள்ளார். பெங்களூரின் நிழலுலக தாதாக்களை பற்றிய கதையாகும். படப்பிடிப்பை முடித்துள்ளோம். ஜூலை 18ம் தேதியன்று திரையிட திட்டமிட்டுள்ளோம்' என்றனர்.முதல் திரைப்படம்நடிகர் கணேஷ் நடிக்கும், பினாகா திரைப்பட படப்பிடிப்பு மும்முரமாக நடந்து வருகிறது. இது தனஞ்செய் இயக்கும் முதல் திரைப்படமாகும். இதை பற்றி அவர் கூறுகையில், “பினாகா என்றால் சிவனின் திரிசூலம் என, அர்த்தமாகும். இதையே தலைப்பாக சூட்டினோம். இதில் நடிகர் கணேஷ், 'ருத்ரா' மற்றும் 'க்ஷுத்ரா' என்ற, இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.''பெங்களூரு ரூரல் மாவட்டம், நெலமங்களா அருகில் படப்பிடிப்பு நடத்துகிறோம். இதற்காக 10 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட செட் போடப்பட்டுள்ளது. படத்தில் கிராபிக்ஸ் அதிகமாக பயன்படுத்தியுள்ளோம். மழை, காற்றுக்கு இடையே ஒரு மாதமாக படப்பிடிப்பு நடத்தி வருகிறோம். ஒவ்வொரு காட்சிகளையும் நுணுக்கமாக எடுக்கிறோம். நான் நடன இயக்குநராக பணியாற்றியுள்ளேன். எனவே படம் இயக்குவது எனக்கு கஷ்டமாக இல்லை,” என்றார்.அட்வான்ஸ் வாபஸ்மூத்த நடிகர் ரவிச்சந்திரனின் மகன் விக்ரம் நடிக்கும், இரண்டாவது திரைப்பட படப்பிடிப்பு, இறுதி கட்டத்துக்கு வந்துள்ளது. இன்னும் இரண்டு வார படப்பிடிப்பு மட்டுமே பாக்கியுள்ளது. இதுகுறித்து, விக்ரம் கூறுகையில், “என் கையில் தற்போது மூன்று படங்கள் உள்ளன. அனைத்தும் புதிய இயக்குநர்கள் மற்றும் கதைகள் கொண்டதாகும். இவற்றில். முதோல் படமும் ஒன்றாகும்.''என் கைகளின் இரண்டு புஜத்திலும், வலி உள்ளது. அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். அதற்குள் படப்பிடிப்பை முடிக்க முயற்சி செய்கிறேன். சில படங்களுக்கு வாங்கிய முன் பணத்தை திருப்பிக் கொடுத்துள்ளேன். தயாரிப்பாளர்களின் பணத்தை தவறாக பயன்படுத்த, நான் விரும்பவில்லை. அவர்களின் உழைப்பை நான் மதிக்கிறேன்,'' என்றார்.சிறுகதையே அடிப்படைரக்ஷித் தீர்த்தஹள்ளி இயக்கத்தில், திம்மன மொட்டகளு திரைப்பட படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஜூன் 27ம் தேதி திரைக்கு வருகிறது. இது பற்ற படக்குழுவினர் கூறுகையில், 'இந்த படத்தின் கதை, ரக்ஷித் தீர்த்தஹள்ளி எழுதிய, 'காடின நெண்டரு' சிறுகதையை அடிப்படையாக கொண்டதாகும். மனிதர்கள், இயற்கை மற்றும் விலங்குகளுக்கு இடையிலான தொடர்பை விவரிக்கிறது.''கொல்கட்டாவில் நடந்த திரைப்பட விழாவில் பங்கேற்றது. மலைவாழ் மக்களின் வாழ்க்கையை படத்தில் கூறியுள்ளோம். வெளிநாடு வாழ் இந்தியர் ஆதர்ஷ் அய்யங்கார் தயாரித்துள்ளார்' என்றனர்.தயாரிப்பாளரே நாயகன்முன்விரோதம், மோதல்கள் கதை கொண்ட, சூ பானா திரைப்பட படப்பிடிப்பு துவங்கியுள்ளது. பிரமோத் கதை, திரைக்கதை, வசனங்கள் எழுதியுள்ளார். படத்தின் கதை பற்றி, அவரிடம் கேட்டபோது, “சமுதாயத்தில் சிறு சிறு விஷயங்களால் மனஸ்தாபம் ஏற்பட்டு, அது கொலையில் முடிகிறது. இது கிராமங்களில் நடக்கும் கதையாகும்.''கிராமத்து பெரிய குடும்பத்தில் அடுத்தடுத்து கொலைகள் நடக்கின்றன. இதை செய்தது யார், என்ன காரணம் என்பதை திரையில் பாருங்கள். மைசூரில் செட் போட்டு, ஒரே கட்டத்தில் படப்பிடிப்பை முடிக்க, நாங்கள் திட்டமிட்டுள்ளோம். படத்தை தயாரிப்பதுடன், பிரோஜ் பாஷா நாயகனாகவும் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ரேகா ரமேஷ் நாயகியாக நடிக்கிறார்,” என்றார்.அபூர்வ செடிகன்னடத்தில், தேவசஸ்யா என்ற படம், திரைக்கு வர தயாராகிறது. அபூர்வமான செடியை சுற்றி நடக்கும் சம்பவங்களை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இதுகுறித்து, இயக்குநர் கார்த்திக் கூறுகையில், “இரண்டு ஊர்களுக்கு நடுவில் நடக்கும் கதை. சிந்தி இளைஞர் கதாபாத்திரத்தில் நெல்சன் நடித்துள்ளார். 1995ல் நடக்கும் கதை என்பதால், அதற்கேற்ற லொகேஷன் கிடைக்கவில்லை. எனவே செட் போட்டு படப்பிடிப்பு நடத்தினோம். தேவசஸ்யா என்றால் என்ன என்பதை, திரையில் பார்த்தால்தான் தெரியும். இது ஐந்து மொழிகளில் திரைக்கு வருகிறது. இதில் பிம்பிகா நாயகியாக நடிக்கிறார்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி