காஸ் கசிந்து தீ விபத்து: தம்பதி மகன் உயிரிழப்பு
கனகபுரா: பெங்களூரு தெற்கு மாவட்டம், கனகபுரா தாலுகாவின், அமர நாராயணா பிளாக்கில் வசித்தவர் சித்தராஜு, 50. இவரது மனைவி சவிதா, 45. தம்பதியின் மகன் பிரசாந்த், 22. இவர்கள் வீட்டு அருகில், கேரேஜ் முன்பாக தள்ளு வண்டியில், பஜ்ஜி, போண்டா, மிக்சர் தயாரித்து விற்று வந்தனர். கடந்த நான்கு நாட்களுக்கு முன், வீட்டில் காஸ் ஸ்டவ்வில் மிக்சர் தயாரிப்பதில் ஈடுபட்டிருந்த போது, சிலிண்டர் பைப்பில் இருந்து காஸ் கசிந்தது தீப்பிடித்தது. தீ பரவியதில் மூவரும் காயமடைந்தனர் . வெளியே ஓடி வந்த இவர்களை மீட்டு, அப்பகுதியினர் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி மூவரும் நேற்று அதிகாலை உயிரிழந்தனர்.