உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஐ.பி.எல்., போட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்

 ஐ.பி.எல்., போட்டி சிறப்பு பஸ்கள் இயக்கம்

பெங்களூரு: 'ஐ.பி.எல்., போட்டிகளின் போது, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்படும், என பி.எம்.டி.சி., நிர்வாகம் தெரிவித்து உள்ளது. பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டிகள் நடக்கின்றன. இப்போட்டிகளை பார்ப்பதற்கு ரசிகர்கள் வருகை பல ரக வாகனங்களில் வருகை தருவர். இதனால், நகரில் போக்குவரத்து நெரிசல் அதிகமாகிறது. இதை கட்டுப்படுத்துவதற்காக, ரசிகர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த ஊக்குவிக்கப்படுகிறது. இதற்காக, ஐ.பி.எல்., டிக்கெட் வைத்திருக்கும் ரசிகர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. இதற்கு வரவேற்பு கிடைத்து உள்ளது. அதுமட்டுமின்றி, ஐ.பி.எல்., போட்டிகள் அன்று அதிகாலை 2:00 மணி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, சின்னசாமி மைதானத்தில் இருந்து நகரின் முக்கிய பகுதிகளை இணைக்கும் வகையில் சிறப்பு பஸ் சேவையை பி.எம்.டி.சி., நிர்வாகம் அறிமுகம் செய்து உள்ளது. வரும் 15, 18, 24 ஆகிய நாட்களில் சின்னசாமி மைதானத்தில் இருந்து சர்ஜாபூர், எலக்ட்ரானிக் சிட்டி, பன்னரகட்டா தேசிய பூங்கா, ஆர்.கே.ஹெக்டே நகர், ெஹாஸ்கோட், பனசங்கரி என பல பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. போட்டி முடிந்தவுடன் பஸ்கள் இயக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை