உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / ஜெயலலிதா நகைகள் மதிப்பீடு செய்யும் பணி துவக்கம்!

ஜெயலலிதா நகைகள் மதிப்பீடு செய்யும் பணி துவக்கம்!

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட தங்க, வைர நகைகளை மதிப்பீடு செய்யும் பணி, நீதிபதி மோகன் முன்னிலையில் தொடங்கியுள்ளது. தமிழக உள்துறை இணை செயலர் ஹனி மேரி, லஞ்ச ஒழிப்பு எஸ். பி., விமலா ஆகியோர் உடன் இருந்தனர். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. இவர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கு, பெங்களூரு சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அந்த வழக்கில் தொடர்புடைய தங்கம், வெள்ளி, வைர நகைகள் அடங்கிய 6 டிரங்க் பெட்டிகள், 1,562 ஏக்கர் மதிப்பிலான நில ஆவணங்கள், கர்நாடக அரசு கருவூலத்தில் வைக்கப்பட்டிருந்தன.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o0z9sip0&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0வழக்கு முடிந்து போன நிலையில், ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள், சொத்து ஆவணங்களை தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் ஒப்படைக்கும்படி கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அவற்றைப் பெற்றுக் கொள்வதற்காக தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸ் படையினர், இன்று கர்நாடகா அரசு கருவூலம் சென்றனர். அங்கு நீதிபதி மோகன் முன்னிலையில் ஒவ்வொரு பெட்டியாக திறந்து, நகைகளை எண்ணி, மதிப்பீடு செய்யும் பணி தொடங்கியுள்ளது. தமிழக உள்துறை இணை செயலர் ஹனி மேரி, லஞ்ச ஒழிப்பு எஸ். பி., விமலா ஆகியோர் உடன் இருந்தனர். அனைத்தும் சரி பார்த்து பட்டியல் தயார் செய்தபிறகே, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் நகைகள், ஆவணங்கள் ஒப்படைக்கப்படும்.இதற்கிடையில், ஜெயலலிதாவின் பொருட்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கூறி அவரது அண்ணன் மகள் மற்றும் மகன் தீபா, தீபக் உரிமை கொண்டாடினர். அவர்களது மனுவை கர்நாடகா உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றமும் இன்று தள்ளுபடி செய்து விட்டது.நாளையும் தொடரும்இன்று பிப்.,14 மாலை 5.45 மணிக்கு, மதிப்பீடு செய்யும் பணியில் பாதியளவே நிறைவு பெற்றுள்ளது. மொத்தமுள்ள 6 பெட்டிகளில், 3 பெட்டிகளில் இருந்த நகைகள் மதிப்பீடு செய்யப்பட்டன. மீதமுள்ள நகைகள், நாளை 15ம் தேதியன்று மதிப்பீடு செய்யப்பட உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 13 )

Seekayyes
பிப் 15, 2025 10:45

சரி, தமிழக லஞ்ச ஓழிப்பு துறை அந்த நகைகளை வாங்கி கொண்டு என்ன செய்வதாய் உத்தேசம்.


Dhanraj V.
பிப் 14, 2025 16:50

கிலோ கணக்கில் தங்கம் இருக்கு.... ஏக்கர் கணக்கில் நிலமிருக்கு.... சேர்த்தவர் உயிர் இருக்கா....?


Dhanraj V.
பிப் 14, 2025 16:48

1500 ஏக்கர் நிலம் இருக்கு..... கிலோ கணக்கில் தங்கம் இருக்கு.... சேர்த்து வைத்தவர் இருக்காரா....? உயிருக்கு உத்திரவாதம் யார் தருவார்....?


ஆரூர் ரங்
பிப் 14, 2025 16:10

திராவிஷக் கழிவில் கலந்தால் பன்னீரும் நாறும்.


ManiK
பிப் 14, 2025 16:03

இந்த நாள் ஆட்சியாளர்களின் மனைவி, துணைவி, இணைவி, கனவுக்கன்னி வீட்ல சோதனை போட்டா புது உலகமே வாங்கலாம். நிச்சயம் ஜெ அம்மா ஊழலில வந்ததை விட அதிகம் சம்பாதித்தவர். ஏனோ சரியாக வாதாடாமல் போய்விட்டார்.


SS
பிப் 14, 2025 14:45

மிக சிறந்த தலைவர் ஜெ. அவரை போன்று தைரியமிக்க பெண் தலைவரை அரசியலில் இனி காண்பது அரிது. இருப்பினும் தவறான நபர்களை தன்னுடன் அவர் வைத்திருந்ததால் அவருக்கு இந்நிலை ஏற்பட்டது.


Velan Iyengaar
பிப் 14, 2025 15:04

அப்போ சுயபுத்தி பூஜ்யம் என்கிறீர்களா ?? புத்திபலம் பூஜ்யம் ...ஹா ஹா ஹா


moulee
பிப் 14, 2025 14:07

Please do the same task in Stalin kanimozhi sabaresa. udhaynidhi Maran's, dmk ministers mla and Councilor houses - you can find the hidden Gold Reserviors…..


Velan Iyengaar
பிப் 14, 2025 14:00

A1 மீது குற்றம் நிரூபிக்கப்படவில்லை என்று இன்னமும் கதறும் கும்பல் வரிசையாக வரவும்..


ஆரூர் ரங்
பிப் 14, 2025 13:42

மகன் மருமகன் பசியுடன் சாப்பிடக் காத்திருக்கிறார்கள்.


sankaranarayanan
பிப் 14, 2025 13:16

எங்கே நமது அறநிலையத்துறை அமைச்சர் உண்டே அங்கே சென்று அந்த நகைகளை உருக்கி ஏதாவது ஒரு வங்கியில் வைத்து அதற்கு சமமான பணத்தை வாங்கி வெளுத்து வீசவேண்டியதுதான் இனி அடுத்த வேலை