உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு / 195 ஆஷா பணியாளர்கள் நீக்கம் கர்நாடக உயர் நீதிமன்றம் தடை

195 ஆஷா பணியாளர்கள் நீக்கம் கர்நாடக உயர் நீதிமன்றம் தடை

பெங்களூரு:ஆஷா சுகாதார பணியாளர்களை பணிநீக்கம் செய்த கர்நாடக அரசின் உத்தரவுக்கு தடை விதித்த உயர் நீதிமன்றம், அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.கர்நாடக சுகாதார துறையில் 195 ஆஷா சுகாதார பணியாளர்களை, இம்மாதம் 12ம் தேதி மாநில அரசு, பணியில் இருந்து நீக்கியது. இந்த உத்தரவை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இம்மனு, நீதிபதி பிரதீப் சிங் யெரூர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் ஸ்ரீதர் பிரபு வாதிட்டதாவது:பணியில் இருந்து நீக்கப்பட்டவர்கள், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகின்றனர். பல்வேறு பயிற்சி வகுப்புகளிலும் பங்கேற்றுள்ளனர். கிராமப்புறம், நகர்ப்புறங்களில் ஆஷா திட்டத்தின் வெற்றிக்கு பின்னால், இவர்களின் பங்கு உள்ளது.மனுதாரர்கள் 10 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியும், அவர்களின் நியமனத்தை முறைப்படுத்த அரசு தவறிவிட்டது. எந்தவித காரணமுமின்றி, அவர்களை பணியில் இருந்து நீக்கி உள்ளனர்.பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு முறைப்படி தகவல் வரவில்லை. அவர்களின் வாட்ஸாப்பில் தகவல் அனுப்பப்பட்டுள்ளது. அரசின் உத்தரவு சட்டவிரோதமானது; அரசியலமைப்புக்கு எதிரானது என்று அறிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் வாதிட்டார்.இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, '195 ஆஷா சுகாதார ஊழியர்கள் பணி நீக்கத்துக்கு, அடுத்த விசாரணை தேதி வரும் வரை தடை விதிக்கப்படுகிறது. இது தொடர்பாக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்படும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை