ரூ.20 கோடியில் மகப்பேறு மருத்துவமனை
பொதுப்பணி சிறப்பு உள்கட்டமைப்புக்கான மூலதன ஆதரவு திட்டத்தின் கீழ், நகரின் முக்கிய, துணை முக்கிய சாலைகளை மேம்படுத்தவும், பிற உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ளவும் அரசிடம், 667 கோடி ரூபாய் கேட்டு முன்மொழிவு அனுப்பப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க, சாலைகளை அகலப்படுத்த, 8 கோடி ரூபாய் ஒதுக்கீடு. சாலை சந்திப்புகளை அழகுபடுத்துதல், நடைபாதைகளை தரம் உயர்த்துதல், நடை மேம்பாலம் கட்ட, 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு. மூலதன பணிகள், பராமரிப்பு பணிகளுக்காக ஒவ்வொரு வார்டுக்கும் தலா 2.25 கோடி ரூபாய் ஒதுக்கீடு. கோரகுண்டேபாளையா சந்திப்பில், சாலை விரிவாக்க பணிக்கு 2 கோடி ரூபாய். சொக்கசந்திரா வித்யாநகரில் உள்ள பழமையான பாலத்தை அகற்றி விட்டு, புதிய பாலம் கட்ட ஒரு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. விஜயநகர் ஹம்பிநகர் வார்டில் கெம்பேகவுடா பவன் கட்ட 25 கோடி ரூபாய். மாநகராட்சி கட்டடங்களில் சோலார் பொருத்த 2 கோடி ரூபாய். கும்பலகோடு மின் மயானத்தை மேம்படுத்த ஐந்து கோடி ரூபாய். மல்லேஸ்வரம், ராஜராஜேஸ்வரிநகர், தாசரஹள்ளி தொகுதிகளின் விரிவான வளர்ச்சிக்கு தலா 5 கோடி ரூபாய் ஒதுக்கீடு. கெங்கேரி கணேஷ் விளையாட்டு மைதான மேம்பாட்டிற்கு 5 கோடி ரூபாய். ஹனுமந்நகர் வார்டு குமாரசாமி பார்க்கில் உள்ள கண்காணிப்பு கோபுரத்தை மேம்படுத்த 3 கோடி ரூபாய். பசவனகுடியின் தியாகராஜநகர் வார்டில் எம்.எல்.ஏ., எம்.பி., அலுவலகம் கட்ட திட்டம் தயாரிக்க ஒரு கோடி ரூபாய். யஷ்வந்த்பூரில் 50 படுக்கைகள் கொண்ட மகப்பேறு, குழந்தைகள் மருத்துவமனையை 20 கோடி ரூபாய் செலவில் கட்ட திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. கட்டுமான பணிக்காக இந்த ஆண்டு 10 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.