உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / பெங்களூரு /  ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மாயமானதாக போலீசில் புகார்

 ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மாயமானதாக போலீசில் புகார்

ஷிவமொக்கா: ஒரு குடும்பத்தை சேர்ந்த, நான்கு பேர் காணாமல் போனதாக போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஷிவமொக்கா புத்தாநகரை சேர்ந்தவர்கள் முகமது பைசல், 35, நர்ஷத் பானு, 54, முகமது ஆதில், 32, முகமது இக்பால், 62. ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள். ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இவர்கள், கடந்த மாதம், 15ம் தேதி வெளியூர் செல்வதாக கூறி, வீட்டை விட்டு வெளியே சென்றனர். வீட்டை விட்டு சென்று பல நாட்கள் கடந்தும், இவர்கள் மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. அவர்களை எங்கு தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து, அவர்களது உறவினர் ஒருவர், தொட்டப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் காணாமல் போனதாக வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடும் பணியை துவங்கி உள்ளனர். குடும்பத்திற்கு கடன் தொல்லை ஏதாவது இருக்கிறதா என போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !