மேலும் செய்திகள்
ஐ.ஏ.எஸ்., அதிகாரி பணியிடமாற்றம்
12-May-2025
பெங்களூரு: கர்நாடகாவில் நான்கு ஐ.பி.எஸ்., அதிகாரிகளை அரசு நேற்று பணியிட மாற்றம் செய்து புதிய பொறுப்பு வழங்கி உள்ளது. சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., ஹிதேந்திரா, சாலை பாதுகாப்பு கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். தகவல் தொடர்பு, நவீனமயமாக்கல் துறை கூடுதல் டி.ஜி.பி., முருகன், ஆள்சேர்ப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆள்சேர்ப்பு பிரிவு கூடுதல் டி.ஜி.பி., சரத் சந்திரா, அரசின் முதன்மை செயலராக நியமிக்கப்பட்டு இருக்கிறார். கூடுதலாக கர்நாடக மாநில போலீஸ் குடியிருப்பு, உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் துறை நிர்வாக இயக்குநராகவும் செயல்படுவார். அரசின் முதன்மை செயலராக இருந்த ரவி, உளவுத்துறை கூடுதல் டி.ஜி.பி., நியமிக்கப்பட்டுள்ளார்.
12-May-2025