உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / வங்கி மற்றும் நிதி / அன்னிய செலாவணி ரூ.51.66 லட்சம் கோடியாக உயர்வு

அன்னிய செலாவணி ரூ.51.66 லட்சம் கோடியாக உயர்வு

மும்பை:கடந்த 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 47 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து, கிட்டத்தட்ட 51.66 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த 2ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அன்னிய செலாவணி கையிருப்பு 47 ஆயிரம் கோடி ரூபாய் அதிகரித்து, கிட்டத்தட்ட 51.66 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது-.முந்தைய வாரத்தில், ஒட்டுமொத்த கையிருப்பு 4,905 கோடி ரூபாய் அதிகரித்து 51.19 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. மதிப்பீட்டுக்கான வாரத்தில், தங்கம் கையிருப்பு 5,046 கோடி ரூபாய் அதிகரித்து 3.99 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது.இவ்வாறு ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை