சென்னையில் ஏ.ஐ., மாநாடு
சென்னை:'டெக்எக்ஸ்' மற்றும் தமிழக அரசின் ஸ்டார்ட் அப் டி.என்., நிறுவனம் இணைந்து, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் வரும், 15, 16ல் ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு, 'கிளவுட்' தொழில்நுட்ப மாநாடு நடத்துகின்றன. இதில் புதிய தொழில்நுட்பங்கள், அதனால் கிடைக்கும் வேலைவாய்ப்பு உள்ளிட்டவை தொடர்பாக வல்லுனர்கள் பேச உள்ளனர்.