உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / பெங்களூரில் அட்லாசியன் விரிவாக்க மையம்

பெங்களூரில் அட்லாசியன் விரிவாக்க மையம்

பெங்களூரு:பெங்களூரில் புதிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்க இருப்பதாக, ஆஸ்திரேலிய மென்பொருள் சேவை நிறுவனமான அட்லாசியன் அறிவித்துள்ளது. கிட்டத்தட்ட 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சதுரடி பரப்பளவில் அமைய உள்ள புதிய மையம், தற்போதைய பெங்களூரு அலுவலகத்தை விட 4 மடங்கு பரப்பளவில் பெரிதாக இருக்கும். அட்லாசியன் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு இந்தியாவில் வேகமாக வளர்ச்சி கண்டு வருவதோடு, தயாரிப்புகளை மேம்படுத்துவதில், இந்தியா முக்கிய பங்கு வகித்து வருகிறது. ஆஸ்திரேலியா, அமெரிக்காவுக்கு வெளியே, இந்தியாவில் 2,500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை