வாசகர்கள் கருத்துகள் ( 1 )
சக்தி தாஸ் குடுத்த 25000 கோடியை வெளியே எடுத்துட்டாங்களோ?
மேலும் செய்திகள்
அதீத முன்னெச்சரிக்கையால் வீழ்ச்சி
08-Nov-2024
• வாரத்தின் நான்காவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தை குறியீடுகள், கடும் வீழ்ச்சியுடன் நிறைவடைந்தன. நிப்டி, சென்செக்ஸ் தலா 1.50 சதவீதம் சரிவுடன் முடிவடைந்தது • நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது, சந்தை குறியீடுகள் உயர்வுடன் துவங்கின. ஆனால், அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்பின் பொருளாதார கொள்கையால், பெடரல் ரிசர்வ், வட்டியை குறைப்பதற்கான வாய்ப்பு குறைவு எனும் செய்தி, ரஷ்யா -- உக்ரைன் இடையேயான போர் குறித்த கவலை ஆகியவற்றால் முதலீட்டாளர்கள், இன்போசிஸ், ரிலையன்ஸ் உள்ளிட்ட பெரும் நிறுவனங்களின் பங்குகளை அதிகளவில் விற்க துவங்கினர். இதனால், பிற்பகல் வர்த்தகத்தின் போது சந்தை, கடும் சரிவை சந்தித்தது• நிப்டி குறியீட்டில் பொதுத்துறை வங்கிகள், ஊடகம் மற்றும் ரியல் எஸ்டேட் தவிர்த்து, அனைத்து துறை சார்ந்த பங்குகளும் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, தகவல் தொழில்நுட்ப துறையைச் சேர்ந்த பங்குகளை கொண்ட குறியீடு, 2.39 சதவீதமும்; வாகனத்துறை பங்குகள் குறியீடு 1.63 சதவீதம் அளவுக்கு சரிவை கண்டன• மேலும், எப் அண்டு ஓ., பிரிவில், வாராந்திர ஒப்பந்தம் நேற்றுடன் முடிவுக்கு வந்ததும், சரிவுக்கு மற்றொரு காரணமாக அமைந்தது.அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று--- ---11,756 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்று இருந்தனர். கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.49 சதவீதம் அதிகரித்து, 73.18 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 7 பைசா சரிந்து, இதுவரை இல்லாத வகையில் 84.47 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை அதானி என்டர்பிரைசஸ் எஸ்.பி.ஐ., ஸ்ரீராம் பைனான்ஸ் சிப்லாஅதிக இறக்கம் கண்டவை எஸ்.பி.ஐ.,லைப் எச்.டி.எப்.சி.,லைப் மஹிந்திரா & மஹிந்திரா இன்போசிஸ் அதானி போர்ட்ஸ்
சக்தி தாஸ் குடுத்த 25000 கோடியை வெளியே எடுத்துட்டாங்களோ?
08-Nov-2024