உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / கரூர் ஜவுளி ஏற்றுமதியில் பாதிப்பு மாற்று சந்தைக்கான திட்டம் தேவை

கரூர் ஜவுளி ஏற்றுமதியில் பாதிப்பு மாற்று சந்தைக்கான திட்டம் தேவை

கரூர்:'அமெரிக்காவின் வரி விதிப்பால், ஆண்டுக்கு 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஜவுளி பொருட்கள் ஏற்றுமதி பாதிக்கும் நிலையில், மாற்று சந்தைகளில் கவனம் செலுத்த, மத்திய - மாநில அரசுகள் திட்டங்களை உருவாக்க வேண்டும்' என, கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை: வரி விதிப்பால், அமெரிக்க இறக்குமதியாளர்கள், இங்கிருந்து ஜவுளி பொருட்கள் வாங்குவதை நிறுத்தி வருகின்றனர்.- உற்பத்தியில் உள்ள ஆர்டர்கள் ரத்து செய்யப்படுகின்றன.- ஏற்கனவே தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு கூட மிகுந்த தள்ளுபடி கேட்கின்றனர்.- அமெரிக்க மொத்த விற்பனையாளர்களால், ஏற்கனவே வினியோகம் செய்யப்பட்ட பொருட்களுக்கு, அங்குள்ள சில்லரை விற்பனையாளர்களிடமிருந்து பணம் பெற முடியவில்லை. இதனால், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.- இது தொடர்ந்தால், தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் உள்ளது. இது கரூர் பகுதியின் சமூக, பொருளாதார நிலையை கடுமையாக பாதிக்கும். உடனடியாக மத்திய அரசு சார்பில்,- சிறப்பு கடன் வசதி, வங்கி கடன் வரம்புகளை உயர்த்துவது போன்ற சலுகைகளை அறிவிக்க வேண்டும். பி.எப்.,- இ.எஸ்.ஐ., போன்ற- பங்களிப்புகளில் சலுகை வழங்க வேண்டும். மாநில அரசு சார்பில், -மின் கட்டணம், சாலை வரி போன்றவற்றில் சலுகை தர வேண்டும். அமெரிக்காவை மட்டுமே சாராமல், மாற்று சந்தைகளில் கவனம் செலுத்த மத்திய - மாநில அரசுகள் திட்டங்களை உருவாக்க வேண்டும்.- 'மார்க்கெட் ஆக்சஸ் இனிஷியேட்டிவ்' மூலம், வியாபாரிகள் வெளிநாட்டு கண்காட்சிகள், சந்தைகள் சென்று ஆர்டர்கள் பெற ஊக்குவிக்கப்பட வேண்டும்.- புதிய சந்தைகளில் வியாபாரம் செய்யும் நிறுவனங்களுக்கு, ஏற்றுமதி அடிப்படையிலான ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.- துறை சார்ந்த ஏற்றுமதி ஊக்க திட்டங்கள் உருவாக்கி, உலகளாவிய போட்டிக்கு உதவ வேண்டும். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சிறப்பு கடன் வசதி, வங்கி கடன் வரம்புகளை உயர்த்துவது போன்ற சலுகைகளையும் அறிவிக்க வேண்டும்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ashwinkumar Thirumoorthy
ஆக 29, 2025 00:49

அமெரிக்காவின் வரி விதிப்பால் ஆண்டிற்கு 2000 கோடி மதிப்பிலான ஜவுளி பொருட்களின் ஏற்றுமதி பாதிக்கும் நிலையில் மாற்று சந்தையில் கவனம் செலுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் திட்டங்களை உருவாக்கி உதவிகள் செய்ய வேண்டும். இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு பணம் செலுத்த முடியாத நிலை தொடர்ந்தால் கரூர் மாவட்டத்தில் பல ஜவுளி வியாபாரிகளும் பல லட்சம் தொழிலாளர்களும் வேலை இழக்கும் அபாயம் ஏற்படும். கரூர் மாவட்டத்தில் பல குடும்பங்கள் ஜவுளி நிறுவனத்தின் வேலைகளை நம்பி பிழைத்துக்கொண்டிருக்கின்றனர். ஜவுளி நிறுவனத்தில் அனைத்து பிரிவுகளில் இருக்கும் அனைத்து தொழிலாளர்களின் குடும்பங்களும் ஜவுளி நிறுவனத்தின் ஊதியத்தை வைத்து தன் வாழ்க்கையை நடத்திக்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்ட ஜவுளி உற்பத்தி வியாபாரிகளும் தொடர்ந்து கரூர் மாவட்ட தொழிலாளர்களுக்கு வேலைகளை கொடுத்துக்கொண்டு இருக்கின்றனர். சமீப காலத்திற்கு முன் நூல் விலைகள் ஏற்றம் கூட வியாபாரிகளையும், தொழிலாளர்களையும் பாதிப்படைய செய்தது. எனில் கரூர் மாவட்ட ஜவுளி நிறுவன வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களின் நலனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசாங்கம் உதவிகள் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.


சமீபத்திய செய்தி