பங்கு சந்தை நிலவரம்: வட்டி எதிர்பார்ப்பு தந்த வாட்டம்
வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, இந்திய பங்குச் சந்தைகள்
இறக்கத்துடன் முடிவடைந்தன. உலகளாவிய சந்தை போக்குக்கு மாறாக, தொடர்ச்சியாக
அன்னிய முதலீடுகள் வெளியேற்றம் காரணமாக நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போது,
இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் சரிவுடன் துவங்கின. ரிசர்வ்
வங்கியின் பணக்கொள்கை கூட்டத்தின் முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இதன்
காரணமாக முன்னெச்சரிக்கையாக முதலீட்டாளர்கள், எண்ணெய் மற்றும் எரிவாயு,
வங்கித்துறை சார்ந்த பங்குகளை அதிகளவில் விற்றனர். இதனால், நாள் முழுதும்
சந்தை குறியீடுகள் தள்ளாட்டத்துடன் வர்த்தகமாகின. வர்த்தக
நேரத்தின் போது அதிகபட்சமாக சென்செக்ஸ் 464 புள்ளிகள் வரை சரிவை கண்டது.
முடிவில், நிப்டி, சென்செக்ஸ் சரிவுடன் நிறைவு செய்தன. உலக சந்தைகள்
திங்களன்று அமெரிக்கச் சந்தைகள் ஏற்றத்துடன் முடிவடைந்தன. ஆசிய சந்தைகளைப்
பொறுத்தவரை, ஜப்பானின் நிக்கி, ஹாங்காங்கின் ஹேங்சேங், தென் கொரியாவின்
கோஸ்பி, சீனாவின் ஷாங்காய் எஸ்.எஸ்.இ., குறியீடுகள் உயர்வுடன் முடிவடைந்தன.
ஐரோப்பிய சந்தைகள் உயர்வுடன் வர்த்தகமாகின. சரிவுக்கு காரணங்கள்
* எண்ணெய் மற்றும் எரிவாயு, வங்கித்துறை பங்குகளை அதிகளவில் விற்றது * ஆர்.பி.ஐ., பணக்கொள்கை கூட்டத்தின் முடிவுகள் குறித்த எதிர்பார்ப்பு https://x.com/dinamalarweb/status/1952893515924668625
கச்சா எண்ணெய்
உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 1.02 சதவீதம் குறைந்து, 68.06 அமெரிக்க டாலராக இருந்தது. ரூபாய் மதிப்பு
அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு பைசா 16 பைசா சரிந்து,87.82 ரூபாயாக இருந்தது. நிப்டி: 24,649.55 மாற்றம்: 73.20 இறக்கம் சிவப்பு சென்செக்ஸ்: 80,710.25 மாற்றம்: 308.47 இறக்கம் சிவப்பு உயர்வு கண்ட பங்குகள் - நிப்டி (%) டைட்டன் 2.02 இண்டஸ்இண்ட் வங்கி 1.66 எஸ்.பி.ஐ.,லைப் 1.56 சரிவு கண்ட பங்குகள் - நிப்டி (%) அதானி போர்ட்ஸ் 1.94 ரிலையன்ஸ் 1.52 இன்போசிஸ் 1.38