24,000 கோடி ரூபாய் வெளியேறியது
அன்னிய முதலீட்டாளர்கள், கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும், கிட்டத்தட்ட 24,000 கோடி ரூபாயை, இந்திய பங்கு சந்தைகளிலிருந்து திரும்பப் பெற்றுள்ளனர்.நடப்பாண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை, மொத்தம் 1.56 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக வெளியே எடுத்துள்ளனர். கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து, அன்னிய முதலீட்டாளர்கள் முதலீடுகளை அதிகளவில் வெளியே எடுத்து வருகின்றனர்.இதே நிலை நீடித்தால், 2025-, அன்னிய முதலீட்டாளர்கள் இந்தியச் சந்தையில் இருந்து அதிகபட்சமாக பணத்தை வெளியே எடுத்த மோசமான ஆண்டாக மாறும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.