உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / வாரி வழங்கிய தங்க பத்திர முதலீடு 156 சதவீதம் லாபம்

வாரி வழங்கிய தங்க பத்திர முதலீடு 156 சதவீதம் லாபம்

புதுடில்லி:ரிசர்வ் வங்கியால், கடந்த 2019 - 20ம் நிதியாண்டில் வெளியிடப்பட்ட 10வது கட்ட தங்க பத்திரக் கணக்கை, முதிர்வுக்கு முன்னதாகவே முடிக்க விண்ணப்பித்தவர்களுக்கு, யூனிட் ஒன்றுக்கு 10,905 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது வெளியிடப்பட்ட அன்று இருந்த விலையோடு ஒப்பிடுகையில், 156 சதவீதம் அதிகமாகும். தங்கம் இறக்குமதியை குறைக்கும் வகையில், மத்திய அரசு தங்க பத்திர சேமிப்பு திட்டத்தை கடந்த 2015ல் துவங்கியது. இதில், தங்கத்தை, ஆவண வடிவில் சேமிக்கலாம். ஒரு கிராம் தங்கம், ஒரு யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும். எட்டு ஆண்டுகளில் தங்க பத்திரம் முதிர்வடையும் நிலையில், ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் முன்கூட்டியே திரும்பப் பெறலாம். அந்த வகையில், கடந்த 2020ம் ஆண்டு, மார்ச் மாதம் 11ம் தேதி வெளியிடப்பட்ட தங்க பத்திரங்களை, நேற்று முதல் முன்கூட்டியே திரும்பப் பெற மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வெளியிடப்பட்ட அன்று ஒரு கிராம் தங்கம் 4,260 ரூபாயாக இருந்த நிலையில், தற்போது 10,905 ரூபாய் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 8, 9, 10 ஆகிய தேதிகளில், 24 காரட் தங்கத்தின் சராசரி விலையைக் கொண்டு, யூனிட் விலை நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இதன்படி ஒரு கிராம் தங்கத்துக்கு 6,645 ரூபாய் லாபம் கிடைக்கிறது. இது 156 சதவீதம் அதிகமாகும். ஒரு கிராம் தங்கம் முதலீட்டின் போது ரூ. 4,260 தற்போது பெறுவது ரூ. 10,905 விலை உயர்வு 156 %


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ