உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  சும்மா இருக்கும் பணத்துக்கு அதிக வட்டி

 சும்மா இருக்கும் பணத்துக்கு அதிக வட்டி

ஜியோ பேமென்ட்ஸ் வங்கி 'சேவிங்ஸ் ப்ரோ' என்ற திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. முக்கிய அம்சங்கள்: வாடிக்கையாளரின் சேமிப்பு கணக்கில் சும்மா இருக்கும் பணத்திற்கு, வழக்கமான வட்டியை விட அதிகமாக, அதாவது 6.5 சதவீதம் வரை வருமானம் ஈட்டும் வாய்ப்பை இத்திட்டம் வழங்குகிறது. வாடிக்கையாளர் தன் கணக்கில் எவ்வளவு இருப்பு இருக்க வேண்டும் என நிர்ணயித்தது போக, அதாவது குறைந்தபட்சமாக 5,000 ரூபாய்க்கும் மேல் உள்ள கூடுதல் தொகையை தானாகவே 'ஓவர்நைட் மியூச்சுவல் பண்டு'களில் முதலீடு செய்யப்படும். தேவைப்படும்போது முதலீடு செய்த தொகையில் 90 வரை வரை, அதாவது அதிகபட்சமாக 50,000 ரூபாய் வரை எடுத்துக்கொள்ளலாம். மீதமுள்ள தொகை 1 - 2 நாட்களில் வாடிக்கையாளரின் கணக்கில் சேர்க்கப்படும். இத்திட்டத்தில் சேரவோ, பணத்தை எடுக்கவோ எந்தவிதக் கட்டணமோ அல்லது 'லாக் - இன்' காலமோ கிடையாது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ