மேலும் செய்திகள்
'சத்யா ஏஜென்சீஸ்' ஐ.பி.ஓ., வெளியிட செபி அனுமதி
30-Jun-2026
'அப்சல்யூட் புராஜெக்ட்ஸ்' மி ன்சார உள்கட்டமைப்பு மற்றும் கட்டுமான பணிகளில் ஈடுபட்டு வரும் இந்நிறுவனம், 2 கோடி புதிய பங்குகளை வெளியிட உள்ளது. இதன் வாயிலாக திரட்டப்படும் நிதி, முதல் உற்பத்தி ஆலையை நவீனப்படுத்தவும், இரண்டாவது ஆலைக்கு புதிய இயந்திரங்களை வாங்கவும், மின்சார உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான உபகரணங்களை கொள்முதல் செய்யவும் பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜி ண்டால் சுப்ரீம்' ப ல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் தொழில் துறை பயன்பாட்டுக்கான உலோக குழாய்களை தயாரித்து வரும் இந்நிறுவனம், 1.07 கோடி புதிய பங்குகளையும், 26.87 லட்சம் பங்குகளை 'ஆபர் பார் சேல்' முறையிலும் வெளியிட திட்டமிட்டுள்ளது. புதிய பங்குகள் வாயிலாக திரட்டப்படும் நிதி, நிறுவனத்தின் கடன்களை அடைக்க பயன்படுத்தப்பட உள்ளது. இந்த இரு நிறுவனங்களின் ஐ.பி.ஓ., வெளியீட்டிற்கு செபி அனுமதி அளித்துள்ளது. மேலும், உலோக தயாரிப்பில் ஈடுபட்டு வரும், 'யோகிஜி டிஜி' நிறுவனம், புதிய பங்குகளை வெளியிடுவதற்காக செபியிடம் முதற்கட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.
30-Jun-2026