உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / வாகன துறையில் குவியும் மியூச்சுவல் பண்டு முதலீடுகள்

வாகன துறையில் குவியும் மியூச்சுவல் பண்டு முதலீடுகள்

அண்மைக் காலமாக, மியூச்சுவல் பண்டு நிறுவனங்கள், வாகனத் துறையில் அதிகம் முதலீடு செய்து வருகின்றன. வாகனத் துறை நிறுவனங்களில், மியூச்சுவல் பண்டு நிறுவனங்களின் முதலீடு, கடந்த ஆகஸ்டில் 10 மாத உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த மாதம், மாருதி சுசூகி, ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, அசோக் லேலண்ட் மற்றும் எம்.ஆர்.எப்., உள்ளிட்ட நிறுவனங்களில் அதிக அளவிலான பங்குகளை வாங்கியுள்ளன. வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் நிறுவனங்களில் முதலீடு செய்யவும் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஜி.எஸ்.டி., மறுசீரமைப்பால் வாகனங்களின் விலை குறைவது, கடனுக்கான வட்டி குறைந்திருப்பதால் வாடிக்கையாளர்கள் ஆர்வம் அதிகரித்திருப்பது மற்றும் வரும் பண்டிகை காலத்தில் விற்பனை அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு ஆகியவை, இதற்கு முக்கிய காரணங்கள். Gallery பண்டுகளின் மொத்த முதலீட்டில் வாகனத் துறையின் பங்கு மாதங்கள் முதலீடு (%) 2024 நவம்பர் 8.30 டிசம்பர் 8.20 2025 ஜனவரி 8.40 பிப்ரவரி 8.10 மார்ச் 7.90 ஏப்ரல் 8.00 மே 8.20 ஜூன் 7.90 ஜூலை 8.00 ஆகஸ்ட் 8.50


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ