பங்குச்சந்தை முதலீட்டில் வடகிழக்கு மாநிலங்கள் ஆர்வம்
வழக்கமாக மும்பை, ஆமதாபாத் போன்ற நகரங்களை மையமாகக் கொண்ட பங்குச்சந்தை ஆர்வம், தற்போது இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் பரவி வருவதை தேசிய பங்குச் சந்தையின் ஆண்டறிக்கை உறுதிப்படுத்துகிறது. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வடகிழக்கு மாநிலங்களில் முதலீட்டாளர்கள் அதிகரிப்பு
* மிசோரம்: 30% வளர்ச்சி * அருணாச்சல பிரதேசம்: 25% வளர்ச்சி * மேகாலயா: 25% வளர்ச்சி சந்தை முதலீட்டில் முன்னணி மாநிலங்கள்
* உத்தர பிரதேசம் * தமிழகம் * மஹாராஷ்டிரா * குஜராத் ஒட்டுமொத்த எண்ணிக்கை
* புதிய முதலீட்டாளர்கள்: 1.50 கோடி (நடப்பாண்டில் மட்டும்) * மொத்த முதலீட்டாளர்கள்: 12.40 கோடி முதலீட்டு முறையில் மாற்றம்
முதலீட்டாளர்களின் மனநிலையிலும் மாற்றம் ஏற்பட்டிருப்பதாக ஆண்டறிக்கை சுட்டிக்காட்டுகிறது. பங்குகளை அடிக்கடி வாங்கி விற்பதைத் தவிர்த்து வருகின்றனர். அதற்குப் பதிலாக, நீண்ட கால அடிப்படையில் முதலீடு செய்யும் முதிர்ச்சியான நிலையை நோக்கி நகர்ந்துள்ளனர்.