உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் /  ரிவார்டு பாயின்ட் எஸ்.பி.ஐ., மாற்றம்

 ரிவார்டு பாயின்ட் எஸ்.பி.ஐ., மாற்றம்

நீ ங்கள் 'எஸ்.பி.ஐ., கிரெடிட் கார்டு பயன்படுத்துபவர் எனில், உங்கள் கார்டில் சேர்ந்துள்ள 'ரிவார்டு பாயின்டுகளை' பயன்படுத்துவதற்கான விதிகளில், வரும் ஏப்ரல் 1ம் தேதி முதல் அதிரடி மாற்றங்களை எஸ்.பி.ஐ., கொண்டு வரவுள்ளது. புதிய மாற்றங்கள் 1. இனி, ஒரு மாதத்துக்கு அதிகபட்சமாக 60,000 'ரிவார்டு புள்ளிகளை' மட்டுமே பணமாக மாற்ற முடியும். அதற்கு மேல் பாயின்ட்ஸ் இருந்தாலும் அந்த மாதத்தில் பயன்படுத்த முடியாது 2. உங்கள் பாயின்டுகளை பணமாக மாற்ற வேண்டுமென்றால், அவை 4,000ன் மடங்குகளில் மட்டுமே இருக்க வேண்டும். சில்லரை பாயின்டுகளை இனி மாற்ற முடியாது 3 'ஏர் இந்தியா எஸ்.பி.ஐ., சிக்னேச்சர் கார்டு, போன்பே எஸ்.பி.ஐ., கார்டு, பர்ப்பிள் மற்றும் செலக்ட் பிளாக்' ஆகிய கார்டுகளுக்கு இந்த புதிய கட்டுப்பாடுகள் பொருந்தாது 4. 'கேஷ்பேக் சலுகை' பாயின்டுகள் கணக்கில் சேர்ந்த 90 நாட்களில் காலாவதியாகிவிடும் 5. 'இன்ஸ்டன்ட் டிஸ்கவுன்ட்' பாயின்டுகள், சலுகை காலம் முடிந்த 120 நாட்களில் பறிபோகும். முக்கிய குறிப்பு: உங்கள் கார்டில் சேர்ந்துள்ள ரிவார்டு பாயின்டுகள் வீணாவதை தவிர்க்க, உடனே 'எஸ்.பி.ஐ., கார்டு' இணையதளத்திற்கு சென்று புதிய விதிகளை சரிபார்த்துக் கொள்ளுங்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி