புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் கால் பதிக்கிறது ஓ.என்.ஜி.சி.,
புதுடில்லி:பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான ஓ.என்.ஜி.சி., புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறை வணிகத்தில் முதன் முதலாக நுழைந்துள்ளது. முதற்கட்டமாக நடப்பாண்டில் மட்டும், ஒரு ஜிகாவாட்டுக்கும் கூடுதல் திறன் கொண்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வசதிகளை கையகப்படுத்த, அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்நிறுவனம், புதுப் பிக்கத்தக்க எரிசக்தி துறை சார்ந்து கையகப்படுத்தும் நிறுவனங்களை கையாள்வதற்காக, 'ஓ.என்.ஜி.சி., க்ரீன்' என்ற துணை நிறுவனத்தை ஏற்கனவே துவங்கிஉள்ளது குறிப்பிடத்தக்கது.