வருமான வரி ஆய்வு: எக்ஸைட் தகவல்
புதுடில்லி:பேட்டரி தயாரிப்பில் ஈடுபட்டு வரும் எக்ஸைட் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் அலுவலகங்கள் மற்றும் தயாரிப்பு ஆலைகளில், வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தியதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பங்குச்சந்தையில் தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் இதை தெரிவித்த எக்ஸைட், அதிகாரிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி வருவதாக கூறியுள்ளது. இதன் காரணமாக, இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிடு வதற்காக நேற்று கூடவிருந்த நிறுவனத்தின் இயக்குனர் குழு கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.