உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பங்கு வர்த்தகம் / சந்தையில் நீடித்த ஊசலாட்டம்

சந்தையில் நீடித்த ஊசலாட்டம்

• வாரத்தின் இரண்டாவது வர்த்தக நாளான நேற்று, சந்தை குறியீடுகள் சிறிய இறக்கத்துடன் நிறைவடைந்தன • நேற்று வர்த்தகம் ஆரம்பித்த போதே, இந்திய சந்தை குறியீடுகள் ஊசலாட்டத்துடன் துவங்கின. பண்டிகை கால விடுமுறையை முன்னிட்டு, பிற்பகல் வரை சந்தை சிறிய ஏற்றத்துடன் வர்த்தகமாகியது. பிற்பகல் வர்த்தகத்தின் போது, முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றதால், முடிவில் சிறிய இறக்கத்துடன் முடிவடைந்தன• நிப்டி குறியீட்டில் நுகர் பொருட் கள், எண்ணெய் மற்றும் எரி வாயு, வாகனத்துறை தவிர, அனைத்து துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு களும் இறக்கம் கண்டன. அதிகபட்சமாக, உலோகத்துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு ஒரு சதவீதமும்; பொதுத்துறை வங்கி, தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த நிறுவனங்களின் குறியீடு 0.5 சதவீதமும் இறக்கம் கண்டன• மும்பை பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங் களில், 2,023 நிறுவன பங்குகள் குறைந்தும்; 1,972 நிறுவன பங்குகள் உயர்ந்தும்; 97 நிறுவனங்களின் பங்குகள் மாற்றமின்றியும் வர்த்தகமாகின• கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று இந்திய பங்குச் சந்தைக்கு விடுமுறை.அன்னிய முதலீடுஅன்னிய முதலீட்டாளர்கள் நேற்று 2,454 கோடி ரூபாய்க்கு பங்குகளை விற்று இருந்தனர்.கச்சா எண்ணெய்உலகளவிலான கச்சா எண்ணெய் விலை நேற்று 1 பேரலுக்கு 0.62 சதவீதம் அதிகரித்து, 73.08 அமெரிக்க டாலராக இருந்தது.ரூபாய் மதிப்புஅமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா குறைந்து, வரலாறு காணாத வகையில் 85.20 ரூபாயாக இருந்தது.டாப் 5 நிப்டி 50 பங்குகள்அதிக ஏற்றம் கண்டவை டாடா மோட்டார்ஸ் அதானி என்டர்பிரைசஸ் ஐச்சர் மோட்டார்ஸ் நெஸ்லே இந்தியா பி.பி.சி.எல்.,அதிக இறக்கம் கண்டவை பவர் கிரிட்  ஜே.எஸ்.டபிள்யு., ஸ்டீல் எஸ்.பி.ஐ.,லைப் டைட்டன் இன்போசிஸ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ