உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / 6 புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை; ஜார்க்கண்டில் துவக்கினார் பிரதமர்!

6 புதிய வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில் சேவை; ஜார்க்கண்டில் துவக்கினார் பிரதமர்!

ராஞ்சி: ஜார்க்கண்ட் மாநிலம் வழியாக இயக்கப்படும் 6 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை பிரதமர் மோடி, இன்று துவக்க வைத்தார்.பிரதமர் நரேந்திர மோடி, இன்று ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகர் சென்றார். அந்த வழித்தடத்தில் 6 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவையை துவக்கி வைத்தார்.இந்த ரயில்கள் டாடாநகர்-பாட்னா, பிரம்மபூர்-டாடாநகர், ரூர்கேலா-ஹவுரா, தியோகர்-வாரணாசி, பாகல்பூர்-ஹவுரா மற்றும் கயா-ஹவுரா ஆகிய வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளன.இது குறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது:புதிய வந்தே பாரத் ரயில்கள் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் வடிவமைக்கப்பட்டுள்ளன. தினமும் ரயில்களில் சென்று வரும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சொகுசான வசதி அளிக்கும் வகையில் இவை உருவாக்கப்பட்டுள்ளன. வேகமான பயண, மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சிறந்த வசதிகள் ஆகியவற்றை தரும் நோக்கத்துடன் இந்த ரயில்கள் உருவாக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ரயில் சேவைகளை துவக்கி வைத்து மோடி பேசியதாவது: ஜார்க்கண்ட் ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.7 ஆயிரம் கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.650 கோடி மதிப்பீட்டில் ரயில் பாதை வழித்தடங்கள் மற்றும் பயண வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.இம்மாநிலத்தில் பழங்குடி மக்கள் ஆயிரம் பேருக்கு வீடுகள் வழங்கியுள்ளோம். எல்லோருக்கும் எல்லாமே என்ற திட்டத்தை நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறோம். அதன் ஒரு பகுதியாக ஏழைகள், ஆதிவாசிகள் மற்றும் தலித்துகளுக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்கிறோம். அதற்கு அடுத்து பெண்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கும் முன்னுரிமை அளிக்கிறோம்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினாார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

venugopal s
செப் 16, 2024 07:16

வேறு ஏதாவது மக்களுக்கு உருப்படியான நன்மை பயக்கும் விஷயங்கள் எதுவும் இந்த மத்திய பாஜக அரசு செய்வது இல்லை போல் உள்ளது. எப்போது பார்த்தாலும் இதையே செய்து கொண்டு இருக்கிறாரே!


சாண்டில்யன்
செப் 15, 2024 15:20

ஜார்க்கண்ட் ரயில்வே துறையை மேம்படுத்த ரூ.7 ஆயிரம் கோடி ஓதுக்கப்பட்டுள்ளது. - செய்தி. அப்டீன்னா ரயில்வேயை மாநில வாரியா பிரிச்சு கொடுத்திட்டாங்களா என்ன?


தமிழ்வேள்
செப் 15, 2024 13:17

பாரதம் போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளுக்கு ஒரே நேரத்தில் அதிக அளவில் பயணிகள் ஏற்றி செல்லும் வகையில் வண்டிகள் தேவை.. சாதாரண வகை வண்டிகளில் - 24 கோச் வண்டி - 2000 பேர்கள் வரை பயணம் செய்ய முடியும்.. ஆனால் வந்தே பாரத் வண்டிகளில் 8 பெட்டிகளில் 500 பேரை மட்டும் ஏற்றிச் செல்வது ரயில் சிஸ்டத்தை குறைவாக பயன்படுத்துவது ஆகும்..அதி வேகத்தை விட மிக வேகமான பாதுகாப்பான பயணம் விரும்பத்தக்க ஒன்று..அதிவேகம் தேவை என்போர் விமான பயணத்தை மேற்கொள்வது நன்று... எல்லா தடங்களிலும் வந்தே பாரத் என்பது நகைப்புக்கு உரிய ஒன்றே....


Kumar Kumzi
செப் 15, 2024 13:53

டயர்கள் இல்லாம ஓடும் டுமிழ்நாடு பஸ்ல ஒனக்கு வந்தே பாரத் தேவையா


M Ramachandran
செப் 15, 2024 13:08

பொறமையால் வெந்து கருகும் சில ஜென்மஙகள் வாடகைக்கு ஆள அமர்த்தி ரயில் வண்டியை கவிழ்க்கா சதி செய்கின்றனர். இதனால் மாக்கள் உயிருடன் விளையாடும் இந்த கும்பல் நாட்டு பற்று சிறிதும் இல்லாதா சுய நல கும்பல். இது எப்பட்டியோர் போனாய் வார்ததைகள் அள்ளிவிட்டு மக்களை மயக்க நிலையில் வைத்து ஒட்டு பொறுக்கி வந்து விடுகிறது. என்ன செய்வது


M Ramachandran
செப் 15, 2024 13:00

தேவைய்யற்ற எழுதாத வார்தைகள் வந்து விழுவதால் கவனிக்க வில்லை என்றால் வம்பு


Sriniv
செப் 15, 2024 12:48

Total வேஸ்ட். Vande Bharat has lost its prestige and uniqueness. Why the PM is flagging off trains, which is the Railway Ministers domain, is a big question. There is nil safety even for regular trains , what is the need for one Vande Bharat a week ?


Kumar Kumzi
செப் 15, 2024 13:57

சொத்துக்கு மதம் மாறிய உன்னை யாரு வந்தே பாரத்ல போக சொன்ன கொத்தடிமை


முருகன்
செப் 15, 2024 11:41

பழைய ரயில்களில் பாதுகாப்பு விஷயங்களை எப்போது மேம்படுத்த போகிறார்கள்?


Barakat Ali
செப் 15, 2024 12:55

தொடர்ந்து பாதுகாப்பு தொழில்நுட்பம், கட்டமைப்புக்கள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன ......... ரயில் பயணங்களில் அடுப்பு பற்ற வைக்காதீர் ..... வந்தே பாரத் ரயில்கள் மீது உங்களது நட்பு வட்டம் கல்லெறிய வேண்டாம் என்றும் சொல்லுங்கள் .....


vadivelu
செப் 15, 2024 13:18

இப்பத்தான் உங்களை இப்படி யோசிக்கவே வைத்து விட்டார். 75 வருடங்கள் நினைத்து பார்க்க கூட நேரமிலாலாம தூங்கிட்டீங்க பாவம்


hari
செப் 15, 2024 14:25

பழைய ரயில்.... பழைய முருகன்..... பழைய சிந்தனை.... என்ன சொல்வது..... கோமாவில் இருக்கும் கொத்தடிமை....


சமீபத்திய செய்தி