சிறுமி பலாத்காரம் வாலிபர் குற்றவாளி
புதுடில்லி:கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாதிக்கப்பட்ட 14 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக வாலிபர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.போக்சோ சட்டம் மற்றும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைதல், பெண்ணின் கண்ணியத்தை சீர்குலைத்தல், பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடைகளை அவிழ்த்து விடுதல், பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வாலிபர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. கூடுதல் அமர்வு நீதிபதி அமித் சஹ்ராவத் விசாரித்து வந்தார். பாதிக்கப்பட்ட சிறுமி, தன் வாக்குமூலத்தில் நிலையானதாக இருந்ததால், அவர் நம்பகமான சாட்சி என்று அறிவிக்கப்பட்டு, வாலிபரை குற்றவாளி என நீதிபதி அறிவித்தார்.வாலிபருக்கு அளிக்கப்படும் தண்டனை குறித்த விவாதங்கள் பின்னர் நடைபெறுமென நீதிபதி அறிவித்துள்ளார்.