உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / டாக்டர்கள் அலட்சியம் 2 நோயாளிகள் பலி?

டாக்டர்கள் அலட்சியம் 2 நோயாளிகள் பலி?

கலபுரகி : ஜிம்ஸ் மருத்துவமனையில், சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், இரண்டு நோயாளிகள் இறந்ததற்கு டாக்டர்களின் அலட்சியமே காரணம் என, அவர்களின் குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.கலபுரகியின் பாரத் நகர் தாண்டாவில் வசித்தவர் சாரதா பாய், 65.இவர் கடுமையான வாந்தி, வயிற்றுப் போக்கால் அவதிப்பட்டார். 12ம் தேதி இவரை குடும்பத்தினர் கலபுரகியின், அரசு சார்ந்த ஜிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர்.சாரதா பாய்க்கு ரத்த பரிசோதனை உட்பட பல பரிசோதனைகள் செய்யும்படி, நர்ஸ் கூறினார்.அதன்படி குடும்பத்தினரும் பரிசோதனைகள் செய்தனர். மாலையில் அறிக்கை வந்தது.டாக்டர் அறிக்கையை பார்த்துவிட்டு, சிகிச்சையை துவக்கி இருக்க வேண்டும். ஆனால் அவரோ மொபைல் போனை பார்த்துக் கொண்டிருந்தார்.சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், சாரதா பாய் உயிரிழந்ததாக, டாக்டர் மீது அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். கலபுரகியின் உதனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் தசரத் ராத்தோட், 50. சில நாட்களாக மூச்சுத்திணறல் பிரச்னையால் அவதிப்பட்டார். இவரை குடும்பத்தினர் நேற்று முன்தினம், ஜிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர், நோயாளியின் நிலை மோசமாக உள்ளதாக கூறி, அவரது சகோதரரிடம் கையெழுத்து வாங்கினார்.நோயாளிக்கு முதலுதவி சிகிச்சை அளித்துச் சென்ற டாக்டர், மீண்டும் வரவே இல்லை. மூச்சுத்திணறல் அதிகரித்தது.டாக்டர் வராததால் சரியான நேரத்தில் சிகிச்சை கிடைக்காமல், தசரத்ராத்தோட் உயிரிழந்தார்.இவரது இறப்புக்கு டாக்டரின் பொறுப்பற்ற தன்மையே காரணம் என, குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர்.சம்பந்தப்பட்ட டாக்டர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பலரும் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை