உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / எனக்கு 8 மொழிகள் தெரியும்... மும்மொழி கொள்கைக்கு எம்.பி., சுதா மூர்த்தி ஆதரவு

எனக்கு 8 மொழிகள் தெரியும்... மும்மொழி கொள்கைக்கு எம்.பி., சுதா மூர்த்தி ஆதரவு

புதுடில்லி: மும்மொழி கொள்கை குறித்து பல்வேறு விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், ராஜ்யசபா எம்.பி.,யும், இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவருமான சுதா மூர்த்தி புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் புதிய தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது பல்வேறு மாநிலங்கள் ஏற்றுக் கொண்ட நிலையில், தமிழகம் உள்ளிட்ட ஒரு சில மாநிலங்கள், மும்மொழி கல்வி உள்ளிட்ட சில அம்சங்களை கடுமையாக எதிர்த்து வருகின்றன. அண்மையில், தி.மு.க., எம்.பி.,களுக்கும், மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கும் பார்லிமென்டில் பெரும் விவாதமே நடந்தது. இந்த நிலையில், புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு கர்நாடகாவைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி., சுதா மூர்த்தி ஆதரவு தெரிவித்துள்ளார். டில்லியில் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது:- புதிய தேசிய கல்விக்கொள்கையானது, மாணவர்களை பல மொழிகளை கற்க ஊக்குவிக்கிறது. ஒருவர் பல மொழிகளை கற்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உள்ளது. எனக்கு 7 முதல் 8 மொழிகள் தெரியும். எனவே, நான் மகிழ்ச்சியோடு கற்கின்றேன். குழந்தைகளும் நிறைய கற்றுக் கொள்ள முடியும், இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

V.Mohan
மார் 19, 2025 16:46

என்னய்யா நீங்களெல்லாம்?? ஹிந்தி கற்பதால் தமிழுக்கு ஒரு கெடுதலும் இல்லை. தமிழர்கள் தமிழை மறப்பதாலும்,அதன் சிறப்பு இலக்கியங்களைப் பற்றிய அறிவும் புரிதலும் இல்லாததாலும் உபயோகம் குறையுமே தவிர மொழி அழியாது. வைணவ ஆழ்வார்களும், சைவப் பெரியோர்களும் கட்டிக் காத்த தமிழை அழிக்க யாராலும் இயலாது. படிக்கும் மாணாக்கர்கள் மூன்றாவது மொழி கற்பது தவறல்ல. அரைகுறை ஆங்கிலத்தை வைத்து தவறான நடத்தைகளை கற்றுக் கொள்வது தான் ஆபத்தில் முடியும் மொழிகளை கற்காமல் மனம் விசாலமாகாமல் மானம் கெட்ட தமிழனாகவே இருக்க வேண்டுமென்பது திமுகவினரின் உள்நோக்கம்.


Bhaskaran
மார் 17, 2025 13:11

உடனே இந்த அம்மா ஆரியர் வந்தேறி என்று உ.பிகள் வசை பாடுவாங்க


Vasudeva
மார் 16, 2025 06:45

இது இரண்டு கட்சிகளுக்கு இடையிலான பிரச்சனையல்ல, அதே மாதிரி இந்த தலைமுறைக்கான பிரச்சனையும் அல்ல, இது தற்போது கற்றல் மூலம் அறிவை வளர்க்க போகும் வருங்கால சந்ததிகளின் வளர்ச்சிகைகு தேவையா? இல்லையா? என்ற கம்பீரமான பிரச்சனை, மக்கள் தாமாக முன்வந்து தங்கள் கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்


Vasudeva
மார் 16, 2025 06:33

சாதாரண தெருவொர வியாபாரியிடம் கேளுங்கள் குறைந்தது நாலு மொழி பேசுவான்


vbs manian
மார் 15, 2025 08:57

விரிவடையாமல் முடங்கி போன மனங்களுக்கு மருந்து இல்லை.


baala
மார் 14, 2025 12:52

நீங்கலாக படித்தீர்களா அல்லது யாரது உங்கள் மீது இதை படிக்க வேண்டும் என்று திணித்தார்களா என்பதையும் சொல்லவும்.


Ananthanarayanan Aa
மார் 17, 2025 08:43

நீ என்ன முட்டாளா திருந்தவே மாட்டியா. உனக்கு தழிழை தவிர்த்து வேறு மொழி தெரியுமா. உன் பசங்க என்ன படிக்கிறார்கள். இல்ல வேலைக்கு போகிறார்களா. அவங்களுக்கு மொழிப் பிரச்சனை வந்ததே இல்லையா


karthik
மார் 14, 2025 12:00

நீங்க சொல்றது நல்லாத்தான் இருக்கு.. உங்களமாதிரி தமிழ் நாட்டு கொத்தடிமைகளும் பல மொழிகள் படிச்சு பாரதம் முழுதும் சென்று பெரிய ஆளாக வந்துவிட்டால் எனக்கு எவன் ஓட்டு போடுவான் தாயீ


K V Ramadoss
மார் 13, 2025 16:24

அய்யய்யோ 3 மொழி படித்து , உங்களைப்போல் எம்.பி ஆகிவிட்டால் ? அதானே எதிர்க்கிறோம் எங்களைத்தவிர வேற யாரும் எம் பி ஆகக்கூடாதே


raju
மார் 13, 2025 13:28

எங்க ஊர் tour guideக்கு 12 மொழி தெரியும் .


manjagrup
மார் 13, 2025 09:44

படிக்கிற வயதில் கூட ஒரு மொழியை படித்தால் தப்பில்லை அது ஒரு கூடுதல் தகுதி தான் நீங்கள் சொல்வது மாதிரி பார்த்தால் ஆங்கிலத்தையும் தேவைப்படும் பொழுது கற்றுக் கொள்ளலாமா மூன்றாவதாக ஏதாவது ஒரு இந்திய மொழியை கற்றுக் கொள்வது கூடுதல் கூடுதல் பலம் தான்


சமீபத்திய செய்தி