உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீங்க அதை மட்டும் செய்து காட்டினால் பதவியை ராஜினாமா செய்வேன்; ராகுலுக்கு ஜம்மு காஷ்மீர் கவர்னர் சவால்

நீங்க அதை மட்டும் செய்து காட்டினால் பதவியை ராஜினாமா செய்வேன்; ராகுலுக்கு ஜம்மு காஷ்மீர் கவர்னர் சவால்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஸ்ரீநகர்: சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது விமர்சித்திருந்த காங்கிரஸ் எம்.பி., ராகுலுக்கு, ஜம்மு காஷ்மீர் துணை நிலை கவர்னர் மனோஜ் சின்ஹா சவால் விடுத்துள்ளார்.

விமர்சனர்

ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, கடந்த வாரம் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.,யுமான ராகுல், ஜம்மு, காஷ்மீருக்கு இருந்த மாநில உரிமை பறித்து விட்டதாகவும், முதல்முறையாக ஒரு மாநிலம் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதாகக் கூறினார். மேலும், துணைநிலை கவர்னர் தான் ஜம்மு காஷ்மீரை இயக்குவதாகவும், இங்கு கவர்னர் மூலமாக மன்னராட்சி நடத்தப்படுவதாக குற்றம்சாட்டினார். ஜம்மு காஷ்மீரில் உள்ள வளங்கள், செல்வங்கள் மற்றும் வேலைவாய்ப்புகள் வெளியாட்களுக்கே வழங்கப்படுவதாகவும், இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என்று கூறியிருந்தார்.

சவால்

அவரது இந்தப் பேச்சுக்கு ஜம்மு காஷ்மீர் துணைநிலை கவர்னர் மனோஜ் சின்ஹா பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-ராகுல் ரகசிய கணக்கெடுப்பு நடத்தினாலும் சரி, கடந்த 5 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீரில் மக்கள் நலத்திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது என்று 75 சதவீதத்திற்கு அதிகமான மக்கள் கூறவில்லை எனில், நான் பதவியை ராஜினாமா செய்கிறேன்.

நம்பிக்கை

அண்மையில் நடந்து முடிந்த லோக் சபா தேர்தலில் அதிக சதவீத வாக்குகள் ஜம்மு காஷ்மீரில் பதிவானது. கடந்த 35 ஆண்டுகள் தேர்தல் வரலாற்றிலேயே, இந்த முறை தான் 58.46 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். பாகிஸ்தானின் உள்ளடி வேலைகளை மக்கள் நன்கு புரிந்து கொண்டனர். இனி இந்தியாவுடன் தான் தங்களின் எதிர்காலம் என்று அவர்களுக்கு தெளிவு கிடைத்திருப்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் வெளிக்காட்டுகின்றன. ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு, அதிலும் குறிப்பாக பள்ளத்தாக்கு பகுதிகளில் வாழும் மக்களுக்கு ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உண்டாகியுள்ளது, எனக் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

Ganesun Iyer
செப் 13, 2024 15:47

அதெல்லாம் தெரியாது, ராவுளுக்கும் / இஸ்டாலினிக்கும் ஓட்டு போடாட்டி பிஜேபி உள்ள வந்துரும் ...


Sathyanarayanan Sathyasekaren
செப் 12, 2024 18:54

திரு சுப்ரமணிய சுவாமி தொடுத்த வழக்கை, ராகுல் பப்பு கான் இரட்டை குடியுரிமை, நேஷனல் ஹெரால்ட் வழக்கு ஆகியவற்றை, சிறப்பு நீதிமன்றத்தில் விரைவாக விடுமுறை, வாய்தா இல்லாமல் தொடர்ந்து விசாரித்து நாட்டில் இருந்து விரட்டி அடிக்கவேண்டும். இவருக்கு வோட்டை போடும் ஹிந்துக்கள் மாறவேண்டிய நேரம்.


C.SRIRAM
செப் 12, 2024 15:45

அரசு ஏன் இந்த கூமுட்டை மேல் மனா நஷ்ட வழக்கு போட்டு ஒவ்வொரு நீதிமன்றத்துக்கும் ஓட விடக்கூடாது . தேச துரோகி .


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 12, 2024 15:43

கோவை சிங்காநல்லூர் பகுதியில் சாலை தடுப்பு சுவரை தாண்டி சாலை விதிகளை மதிக்காமல் தான் ஒரு முன்னுதாரணமாக மக்களுக்கு இருக்க வேண்டியவன் என்பது கூட தெரியாமல் முன்னரே திட்டமிட்டபடி இனிப்பு கடையில் இனிப்பு வாங்கி முதல்வருக்கு கொடுத்தவர். ஜம்மு காஷ்மீர் சென்று மாநில அந்தஸ்து யூனியன் பிரதேசம் பற்றி பேசுகிறார்.


Nagarajan D
செப் 12, 2024 14:00

ஒரு கேடுகெட்டவரின் புலம்பல்.... இவரை தலைவனாக கொண்ட கூட்டத்திற்கு எவ்வளவு அறிவு இருக்கும் என்று புரிந்துகொள்ளுங்கள். மடசாம்பிராணி. இவரை போல் ஒருவன் எந்த நாட்டிலும் பிறந்திருக்கமாட்டான் இனி பிறக்கவும் மாட்டான்... பதவி இல்லாமல் இந்த கிறுக்குப்பயலால் இருக்க முடியவில்லை... பாரததேச அரசாங்கம் இவர் எங்கே செல்கிறார் யாரை சந்திக்கிறார் என்று கூர்ந்து கவனித்து அதற்காக மிக கடுமையான தண்டனை கொடுத்து பதவியை பிடிங்கி சிறையில் தள்ள வேண்டும் இந்த தேச துரோகியை


nagendhiran
செப் 12, 2024 12:51

பப்பு ராகுல் பேசுவதில் எதற்காகவாது ஆதாரத்தோடு பேசுறானா? பதில் சொல்லு?


RAMAKRISHNAN NATESAN
செப் 12, 2024 12:42

சமாளிக்க முடியாம திணறும் பாஜக .......


RAMAKRISHNAN NATESAN
செப் 12, 2024 12:47

ஒரு அரை சாரி முழு கிராக்கை சமாளிக்க முடியாமே .....


G Mahalingam
செப் 12, 2024 13:35

ஆதாரம் இல்லாமல் எதிர் கட்சி தலைவர் பேசுவதால்தான்ராகுல் பேச்சுக்கு மரியாதை இருப்பதில்லை.


G Mahalingam
செப் 12, 2024 13:35

ஆதாரம் இல்லாமல் எதிர் கட்சி தலைவர் பேசுவதால்தான்ராகுல் பேச்சுக்கு மரியாதை இருப்பதில்லை.


Nagarajan D
செப் 12, 2024 14:05

இவர் பேசுவதை அவர் கட்சி க்காரனே தலையில் அடித்துக் கொண்டிருக்கிறான் இதில் பிஜேபி தின்னுறது என்று சொல்றீங்களே பப்புவை யாராவது மதிக்கிறாங்களா? வேலை வெட்டி இல்லாதவங்க இவரை அழைத்து அங்கே ஒரு காமெடி அல்ல கிறுக்கு ஷோ நடத்துகிறார்கள்... இவரை போன்ற பாரததேசத்தின் எதிரி நாளேடுகள் அமெரிக்காவில் இவனை பாகிஸ்தான் ஆளா அல்லது இந்தியாவை சேர்ந்தவனா என்று எள்ளி நகையாடுது... மொத்த கேவலத்தை உருவமிவர்


Mohan
செப் 12, 2024 15:06

என்னைக்குமே அறிவாளி கூட பேசி சமாளிச்சாரலாம் ஆனா அரைவேக்காடு காங்கிரஸ், டி எம் கே காரங்க கிட்ட பேசவே முடியாது என்ன்ன அவுங்க டிசைனும் மூளையும் அவ்வளவே ..முட்டாள்கல சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்


Kumar Kumzi
செப் 12, 2024 16:22

பார்ர்ரா ஓசிகோட்டர் கூமுட்ட கருத்து சொல்லுது


sivakumar Thappali Krishnamoorthy
செப் 12, 2024 12:33

ராகுலின் இரட்டை குடியுரிமையினை நிரூபித்து இந்தியாவை விட்டு வெளியேற்றுங்கள் ...காலதாமதம் இந்தியாவின் கௌரவத்தை பாதிக்க வைக்கும்.


karthik
செப் 12, 2024 12:22

இந்த ராகுல் தேசத்திற்கு மிகவும் ஆபத்தானவர்.


sureshpramanathan
செப் 12, 2024 12:04

Rahul should be ashamed of himself for making all fake statements He is never Indian citizen and not patriotic to this country His family has looted India for 50 plus years and should be sent to jail for corruption and stealing Indian wealth Throw him in Tihar jail


முக்கிய வீடியோ