உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / நீண்ட கால லிவ்- இன் வாழ்க்கையை பலாத்காரம் என கூற முடியாது:சுப்ரீம் கோர்ட்

நீண்ட கால லிவ்- இன் வாழ்க்கையை பலாத்காரம் என கூற முடியாது:சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி,'நீண்ட காலமாக, 'லிவ் இன்' எனப்படும் திருமணமின்றி சேர்ந்து வாழும் வாழ்க்கையில் இருந்த பெண், பாலியல் கொடுமைக்கு ஆளானதாக கூறுவது சட்டத்தை துஷ்பிரயோகம் செய்வதாகும்' என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. வங்கி அதிகாரி ஒருவரும், பேராசிரியை ஒருவரும், 16 ஆண்டுகள் ஒன்றாக லிவ் -இன் உறவில் வாழ்ந்த பின், இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. வேறு பெண்ணை திருமணம் செய்ய வங்கி அதிகாரி தீர்மானித்ததால், அவர் மீது பாலியல் வன்கொடுமை புகாரை பேராசிரியை அளித்தார். மேல்முறையீடுஇதையடுத்து, வங்கி அதிகாரி மீது பாலியல் வழக்குப்பதிவு செய்து குற்ற நடவடிக்கை எடுக்குமாறு, கடந்த 2022ல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வங்கி அதிகாரி மேல்முறையீடு செய்தார். அதை விசாரித்த நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா அமர்வு, நீண்ட காலமாக லிவ் -இன் வாழ்க்கையில் இருந்த பெண், பாலியல் கொடுமைக்கு உள்ளானதாக கூறுவதை ஏற்க முடியாது என தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது:திருமணம் செய்வதாக உறுதி அளித்து, 16 ஆண்டு காலம் பலாத்காரம் செய்தார் என்ற குற்றச்சாட்டை நம்புவது கடினம். திருமண வாக்குறுதியை நிறைவேற்றுவார் எனக் கருதி, மீண்டும் மீண்டும் பாலியல் உறவுக்கு அந்த பெண் சம்மதித்ததாக கூறுவது ஜீரணிக்க முடியாதது; சாத்தியமற்றது. இருவருமே இத்தனை ஆண்டுகள் தங்கள் உறவை தொடர்ந்த நிலையில், அதை வலுக்கட்டாய உறவு என கூற எந்தவித ஆதாரமும் இல்லை. புகார் கூறும் பெண், நன்கு படித்தவர்; நல்ல நிலையில் இருப்பவர். அவருக்கு இத்தனை ஆண்டுகள் எதுவும் தெரியாமல் போக வாய்ப்பு இல்லை. துஷ்பிரயோகம்பல இடங்களுக்கு பணி மாறுதலான போதும், இருவரும் பரஸ்பரம் அடுத்தவர் வீடுகளுக்கு சுமுகமாக சென்று நெருக்கமான உறவை பேணி வந்துள்ளனர். லிவ் இன் உறவை துவங்கியபோது, திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்தார் என்பதற்கான ஆதாரமும் இல்லை. புகார் தெரிவித்த பெண் கூறும் நிகழ்வுகள் முரணாக உள்ளன. உண்மையிலேயே பலாத்காரம் செய்யப்பட்டிருந்தால், இத்தனை ஆண்டுகள் அவர் எப்படி அமைதியாக இருந்தார்? லிவ் இன் உறவு கசந்ததால், பாலியல் வழக்கு தொடரப்பட்டிருக்கிறது. எனவே, ஆணுக்கு எதிராக பலாத்கார குற்ற நடவடிக்கையை எடுக்க உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர் மீதான பலாத்கார வழக்கை தொடருவது நியாயமற்றது; சட்ட நடைமுறையை துஷ்பிரயோகம் செய்வதற்கு சமம்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

M S RAGHUNATHAN
மார் 07, 2025 13:00

உயர் நீதி மன்ற நீதிபதிகள் ஒரு வேளை ஈரோடு வெங்காயத்தின் வழித் தோன்றல்களா? செய்தியில் இந்த வழக்கு எந்த உயர் நீதிமன்றத்தில் எந்த நீதிபதிகளால் அளிக்கப் பட்டது. அவர்களுக்கு தமிழக அரசு உயர்ந்த பட்டம் கொடுக்க வேண்டும். சாதாரணமாக ஒரு சாலையில் செல்பவரிடம் சொன்னால் அவர் இதெல்லாம் ஒரு வழக்கா? இதற்கு உயர் நீதி மன்ற நீதிபதிகள்? எப்படி இம்மாதிரி தீர்ப்பு கொடுத்தார்கள் என்று....


V GUNASEKARAN
மார் 07, 2025 11:36

16 வருடமாக இரவில் பாலியல் வன்கொடுமையை அனுபவித்து விட்டு பகலில் எப்படி மாணவ மாணவிகளுக்கு பாடம் நடத்த முடியும்??? இவளை உடனே வேளைய விட்டு தூக்கி மோசடி புகார் கொடுத்த காரணத்தை வைத்து 10 ஆண்டுகள் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும்.


தோஸ்த்கான்
மார் 07, 2025 11:06

அந்தம்மாவும் இன்னொரு ஆளைப் பாத்துக்க வேண்டியது தானே... கலியாணம் வாணாம்னு 15 வருசம் ஜாலியா இருந்துட்டு இப்போ கேஸ் போட்டா எப்பிடி? சரி, புள்ள குட்டி ஏதாவது உண்டா?


visu
மார் 07, 2025 08:46

கல்யாணம் இல்லை பலாத்கார புகார் என்றால் அதுக்கு கல்யாணம் முறைப்படி செய்துட்டு போகலாமே தீர்ப்பு மிக சரி .லீவ் இன் என்பதே திருமணத்தினால் வரும் பிரச்சினைகளை சமாளிக்க பயப்படுபவர்கள் செய்வதுதானே அப்புறம் 20 இல் திருமணம் செய்தாலென்ன 60 இல் செய்தாலென்ன


Mecca Shivan
மார் 07, 2025 07:57

திராவிட தமிழர் வாழ்க்கைமுறையை சரி என்று கூறிய கணங்களுக்கு நன்றி என்று சைமன் கூறுகிறார்


Raj
மார் 07, 2025 07:47

சட்டம் தன் கடமையை செய்யும்.


GMM
மார் 07, 2025 07:40

திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழ்ந்தாலும் முதலில் திருமணம் பதிவாளரிடம் பதிவு செய்ய சட்டம் அவசியம். இது போல் திருமணம் ஆகி பிரிந்து வழிந்தாலும் தேவை. திருமணத்திற்கும் தேவை. நீதிபதியின் நேர்மையான பார்வை போலீசிடம் இல்லை. ? மாநில போலீஸ் அரசியல் கலந்தது. புகார் மனு நேரடியாக பெறுதல் போன்ற மாநில போலீசுக்கு நிர்வாக பணி எதுவும் கொடுக்க கூடாது. இது குற்றத்தை அதிகரிக்கும்.


Karthik
மார் 07, 2025 06:36

இத்தீர்ப்பு 100 சதம் டபுள் லட்டு சைமனுக்கானதும் கூட.சைமனுக்கு ஹாப்பி. அதேநேரம் இத்தீர்ப்பால் அடுத்த சீசனில் தொடங்க இருந்த "நமுத்து போன லட்சுமி வெடி" தொடரின் க்ளைமாக்ஸ் எல்லாருக்கும் தெரிந்துவிட்டதால்.. இனியும் தொடர முடியாத தொடர் ஆகிவிடும்.


D.Ambujavalli
மார் 07, 2025 06:18

16 ஆண்டுகள் திருமணமில்லாத வாழ்க்கை என்பதில் இருவரும் உடன்பட்டுத்தானே இருந்திருக்கிறார்கள் Agreement முடிந்துவிட்டது, எனக்கு என் வழி, உனக்கு உன் வழி என்று சென்றுவிட்டார் இத்தனை காலம் சென்று அந்தப் பெண்மணி மணம் செய்துகொள்வதில் பிரசினை எழத்தானே செய்யும் இதெல்லாம் அந்த உறவுமுறையை தொடங்கும்போதே தெரியாத அளவுக்கு அவர் பாமர பெண்மணி இல்லையே


கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
மார் 07, 2025 06:01

சீமானுக்கு விடுதலை நிச்சயம்....திமுக இவ்விஷயத்தை கை விட்டுவிடும்.... விஜயலக்ஷ்மி நிலைதான் பரிதாபம்....!!!


Pandi Muni
மார் 07, 2025 08:16

விஜயலக்ஷ்மி மிரட்டி காசு பார்க்கும் நடிகை. அதற்காக சீமான் கண்ணியம் மிக்கவர் என கூறமுடியாது. தமிழன் தலைகுனியக் காரணமே திராவிடன்தான்


புதிய வீடியோ