உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / வங்கதேச பிரதமருடன் பேச அழைக்காததற்கு மம்தா வருத்தம்

வங்கதேச பிரதமருடன் பேச அழைக்காததற்கு மம்தா வருத்தம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கோல்கட்டா: வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவின் வருகையைத் தொடர்ந்து நடந்த இரு தரப்பு பேச்சின்போது, மேற்கு வங்கம் தொடர்பான விஷயங்கள் குறித்து தன்னிடம் எந்தக் கருத்தையும் கேட்காததற்கு, மத்திய அரசு மீது, முதல்வர் மம்தா பானர்ஜி கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.நம் அண்டை நாடான வங்கதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசீனா சமீபத்தில் இரண்டு நாள் பயணமாக நம் நாட்டிற்கு வந்தார். பிரதமர் நரேந்திர மோடியுடனான சந்திப்பின்போது, பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.இந்நிலையில், மேற்கு வங்கத்தில் பாதிப்பை, தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய விவகாரங்கள் தொடர்பாக, மத்திய அரசு எந்தக் கருத்தையும் கேட்காததற்கு, மாநில முதல்வரும், திரிணமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி கடும் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.பக்ருவா தடுப்பணைஇது குறித்து, திரிணமுல் காங்., மூத்த தலைவர்கள் கூறியுள்ளதாவது:வங்கதேச பிரதமரின் வருகையின்போது, சில முக்கிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அதில் ஒன்றான பக்ருவா தொடர்பான ஒப்பந்தம், வரும் 2026ல் முடிவடைய உள்ளது. இதை ஏற்கனவே உள்ள நிபந்தனைகளுடன் தொடர்வது குறித்து இரு தரப்பும் முடிவு செய்துள்ளன.இந்த ஒப்பந்தம், மேற்கு வங்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். பக்ருவா தடுப்பணை என்பது, மேற்கு வங்கத்துக்கு மிகவும் முக்கியமாகும். கங்கை நதி இந்த வழியாகத்தான் வங்கதேசத்துக்குள் நுழைகிறது.இந்த தடுப்பணை வழியாக ஹூக்ளி நதிக்கு தண்ணீர் மாற்றி விடப்படும். இது கோல்கட்டா துறைமுகம் மற்றும் கோல்கட்டா உட்பட ஹூக்ளி - பாகிரதி நதிக்கரையோர பகுதிகளுக்கான குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. இந்த விஷயத்தில் மாநில அரசின் கருத்தை கேட்டிருக்க வேண்டும்.அதுபோல, 1996ல் செய்யப்பட்ட கங்கை நதிநீர் பங்கீட்டு ஒப்பந்தத்தை புதுப்பிப்பது தொடர்பாக, கூட்டு தொழில்நுட்பக் குழு அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர, வங்கதேசத்தில் டீஸ்டா நதிப் பகுதியை பராமரிக்க மற்றும் நிர்வகிக்க உதவுவதற்காக, மத்திய அரசின் நிபுணர் குழுவை அனுப்பவும், அங்கு தடுப்பணைகள் கட்டவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.இந்த திட்டங்கள், மேற்கு வங்கத்துடன் நேரடி தொடர்பு உள்ளவை. ஆனால், இது தொடர்பாக, மாநில முதல்வரிடமோ, மாநில அரசுடனோ எந்த பேச்சையும் மத்திய அரசு நடத்தவில்லை. வங்கதேச பிரதமருடனான பேச்சின்போது, மேற்கு வங்கத்தையும் அழைத்திருக்க வேண்டும்.ஒருதலைபட்சம்இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமருக்கு முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுத உள்ளார். மேலும், பார்லிமென்டிலும் இது குறித்த பேச திட்டமிட்டுள்ளோம். இண்டியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் ஆதரவைப் பெற திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு, மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். அதில், 'டீஸ்டா நதி விவகாரம், மேற்கு வங்க அரசுடன் தொடர்புடையது. இதில், மாநில அரசின் கருத்தை கேட்காமல், மத்திய அரசு செயல்பட்டிருப்பது, ஒருதலை பட்சமானது' என, தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 12:49

மாநிலம் என்பது மத்திய அரசின் தாற்காலிக கிளை அமைப்பு மட்டுமே. கூட்டணிப் பேச்சுவார்த்தை களுக்கு கிளைக்கழக நிர்வாகிகளை அழைப்பதில்லையே.


ஆரூர் ரங்
ஜூன் 25, 2024 12:48

வங்கதேச மக்கள் குடிநீர் விவசாயத் தேவைகளுக்கு ஆற்று நீரை நம்பியுள்ளனர். அதே ஆற்று நீர் நமது கல்கத்தா துறைமுகம் செயல்படவும் அத்தியாவசியமாக இருக்கிறது. இரண்டில் எது முக்கியம்?


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 25, 2024 10:18

இனி இலங்கையுடன் பேசுவதற்கு என்னையும் அழைக்கணும் தமிழ்த்தேச மன்னர் ஆவேசம் ......


தாமரை மலர்கிறது
ஜூன் 25, 2024 02:31

அடுத்த நாட்டு பிரதமருடன் பேசவதற்கு மாநில முதல்வர், கவுன்சிலர் என்று எல்லோரையும் கூட்டிட்டு போகமுடியாது.


sankaranarayanan
ஜூன் 25, 2024 01:55

என்னதான் உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பறவையாக முடியவே முடியாது அம்மையார் மாநிலத்தின் முதல்வர் அம்புட்டேதான் அதர்க்கு மேல் தாண்டவம் ஆடக்கூடாது இது இரு நாடுகளுக்குண்டான பேச்சு வார்த்தை இரு மாநிலங்களுக்குளான்டான பேச்சு வார்த்தை என்றால் இவருக்கு அழைப்பு வாராது கம்முன்னு கிடக்கணும் அவ்வளவேதான்


RajK
ஜூன் 25, 2024 00:09

ஒரே ஒரு மாநிலத்தில் மட்டும் இருக்கும் மாநில கட்சிகள் மாநிலம் என்பதையும் நாடு என்பதையும் ஒரே அளவில் வைத்து பார்க்க வேண்டும் என்று நினைக்கின்றனர். இங்கு திமுகவும் அப்படித்தான் மாநிலம் என்பதையும் நாடு என்பதையும் ஒரே அளவு என்று மக்களிடம் பதிய வைத்துள்ளார்கள். உண்மையில் நம்மை ஆள்வது இந்த நாட்டின் ஆட்சியாளர்கள் தான், சில துறைகளை மட்டும் மாநிலங்களுக்கு கொடுத்து பார்த்துக்கொள்ள சொல்கின்றனர். மாநிலத்தை ஆளும் முதலமைச்சர் ஒவ்வொரு பகுதி எம்எல்ஏக்களுக்கும் அந்தந்த தொகுதியில் அவர்களுக்கு முழு அதிகாரத்தையும் கொடுக்க முடியுமா? இல்லை மேயருக்கு கொடுப்பார்களா? இல்லை கலெக்டருக்கு கொடுப்பார்களா? வெளியுறவுத்துறை என்பது மத்திய அரசு மட்டுமே கையாள்கிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் ஆட்சியாளர்கள் வேண்டுமென்றால் மாநில முதலமைச்சர்களை சந்திக்க விரும்பினால் இது நடக்கலாம். அப்படி என்றால் ஷேக் ஹசீனா மம்தாவை பார்க்க விருப்பமில்லை என்று தான் அர்த்தம்.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை