உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ஆட்டோவை அலேக்காக தூக்கிய தனி ஒருத்தி! அம்மாவை காத்த 14 வயது சிறுமி!

ஆட்டோவை அலேக்காக தூக்கிய தனி ஒருத்தி! அம்மாவை காத்த 14 வயது சிறுமி!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மங்களூரு; மங்களூரு அருகே தாய் மீது கவிழ்ந்த ஆட்டோவை தனி ஒருத்தியாக 14 வயது சிறுமி ஒருவர் தூக்கி காப்பாற்றிய வீடியோ வைரலாகி இருக்கிறது.இது பற்றிய விவரம் வருமாறு; ராஜரத்னபுரா பகுதியைச் சேர்ந்தவர் சேத்னா (35). வழக்கமான தமது பணியை முடித்துக் கொண்டு பள்ளியில் இருந்து வீடு திரும்பும் மகளை அவர் அழைத்துச் செல்வார். சம்பவத்தன்று கின்னிகோலி பகுதியில் டியூசன் படிக்கச் சென்ற தமது மகளை அழைத்து வரச் சென்றார்.சாலையில் ஒருபுறம் நின்று கொண்டு இருந்த சேத்னா,மறுபுறம் மகள் வைபவி (14) காத்திருப்பதைக் கண்டார். சற்றும் தாமதமின்றி சாலையை கடந்தார். அப்போது இடதுபுறம் அசுர வேகத்தில் ஆட்களுடன் ஆட்டோ ஒன்று திடீரென வந்தது. சாலையின் குறுக்கே சேத்னா வருவதை அறிந்த ஆட்டோ டிரைவர், அவர் மீது மோதாமல் இருக்க வண்டியை நிறுத்தினார்.வேகம் அதிகம் என்பதால் ஆட்டோ அப்படியே சேத்னா மீது கவிழ்ந்து பல அடி தூரம் இழுத்துக் கொண்டு சென்றது. விபத்தைக் கண்ட மகள் வைபவி பதறியபடி ஓடி வந்தாள். தனது தாய் மீது ஆட்டோ சாய்ந்து கிடப்பதைக் கண்டு கொஞ்சமும் பதறாமல் தீரத்துடன் தனியாளாக அந்த ஆட்டோவை அப்படியே தூக்கி நிறுத்தி தாயை காப்பாற்றினார்.ஆட்டோவை தூக்கிய போது அதனுள் இருந்த சிலர், காயங்களுடன் பீதியில் உள்ளே இருந்து எழுந்து தப்பித்துச் சென்றனர். பின்னர் அனைவரும் ஒன்று சேர்ந்து கீழே விழுந்த சேத்னாவை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.14 வயது மாணவியின் வீரதீர செயல் அங்கிருந்த சி.சி.டி.வி., கேமராவில் பதிவாகி இருக்கிறது. சமூக வலைதளங்களில் வெளியான இந்த வீடியோவை பலரும் பார்த்து தைரியமாக சமயோசித புத்தியுடன் செயல்பட்டு தாயையும், ஆட்டோவில் வந்த மற்றவர்களையும் காப்பாற்றிய சிறுமிக்கு வீரதீர செயல்களுக்கான விருது அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். மேலும், சிறுமியின் தைரியத்தையும் பாராட்டி வாழ்த்து பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Srinivasan Krishnamoorthi
செப் 09, 2024 17:54

தாய் மருத்துவத்துக்கு முதலில் கர்நாடக அரசு உறுதி செய்யட்டும்


God yes Godyes
செப் 09, 2024 14:08

ஆண்களை பெண்கள் அதிக புத்திசாலிகள் என்பதை அந்த பெண் நிரூபித்திருப்பதன் மூலம் தண்ணியடி ஆண்களுக்கு உறைத்தால் சரி.


Kumar Kumzi
செப் 09, 2024 14:03

மிகவும் சாதூர்யமாக செயல்பட்ட சிறுமிக்கு வாழ்த்துக்கள்


தர்மராஜ் தங்கரத்தினம்
செப் 09, 2024 14:00

யார் யாரையோ - அலைக்கற்றையில் கொள்ளையடித்துவிட்டு திகார் போய்ட்டு வந்ததையும் - சிங்கப்பெண் என்கிறோம் ....


Nandakumar Naidu.
செப் 09, 2024 13:49

உண்மையில் வீரப்பெண் தான். அவர் பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள்.


புதிய வீடியோ