உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / பெங்களூரில் வரும் 21ம் தேதி  கர்நாடக தமிழர் சந்திப்பு கூட்டம்

பெங்களூரில் வரும் 21ம் தேதி  கர்நாடக தமிழர் சந்திப்பு கூட்டம்

பெங்களூரு, : கர்நாடக தமிழர் சந்திப்பு கூட்டம் பெங்களூரில் வரும் 21ம் தேதி நடக்கிறது. கர்நாடகாவில் பல நுாற்றாண்டுகளாக தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழக வளர்ச்சிக்கும், கர்நாடக வளர்ச்சிக்கும் அவர்களின் பங்கு அதிகம்.கர்நாடகாவில் தமிழையும், தமிழர்களின் நலனையும் பாதுகாப்பதில், பல்வேறு தமிழ் அமைப்புகள் இயங்கி வருகின்றன.சமீப காலமாக, அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரகம் பல்வேறு வகையில் அயலக தமிழர்களுக்கு உதவி வருகிறது. ஆனால், அயலக தமிழர்களுக்கான தமிழக அரசின் எந்த திட்டமும், கர்நாடக தமிழர்களுக்கு கிடைக்காமல் உள்ளது.இந்த வகையில், கர்நாடக தமிழ் பத்திரிகையாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை:பெங்களூரு குயின்ஸ் சாலையில் உள்ள இன்ஸ்டிடுயூஷன் ஆப் அக்ரிகல்சுரல் டெக்னாலஜிஸ்ட்ஸ் அரங்கில், வரும் 21ம் தேதி காலை 10:00 மணி முதல் மதியம் 3:30 மணி வரை, 'கர்நாடக தமிழ் சந்திப்பு' கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழக அரசின் அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத்துறை ஆணையரக கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி, பெங்களூரு குடிநீர் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கின்றனர்.கர்நாடகாவில் செயல்பட்டு வரும் தமிழ்ச் சங்கங்கள், தமிழ் அமைப்புகள், தமிழ் தன்னார்வலர்கள் பங்கேற்கலாம். கூட்டத்தில் பங்கேற்க விரும்புவோர், https://forms.gle/BcahbQRYoCXxwBAE7 என்ற இணையப்பக்கத்தில் விண்ணப்பிக்கலாம்.கூடுதல் தகவலுக்கு, 63631 18988 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

c.chandrashekar
ஜூன் 20, 2024 15:05

95 % தமிழ் பள்ளிகள் மூடப்பட்டு விட்டன அல்லது கன்னட பள்ளியாக மற்ற பட்டுவிட்டன ,இருக்கும் 5 % பள்ளிகளும் பழுதடைந்து ஆசிரியர்கள் இல்லாமலும் மாணவர்கள் இல்லாமலும் மிகவும் பரிதாபத்துக்குரிய நிலையில் உள்ளன , இன்று உள்ள கர்நாடக தமிழ் தலைமுறைன்ருக்கு 99% தமிழ் எழுத படிக்க தெரியாது கடந்த களங்களில் பார்த்தோமானால் நம் தமிழ் பள்ளிகள் முடி வரும் அதே வேளையில் உருது பள்ளிகள் பெருகி வருகின்றன இது அவர்களின் ஒற்றுமையை கட்டு கிறது ஆங்கில பள்ளிகள் படிக்கும் தமிழர்கள் மூன்றாவது மொழியாக தமிழ் படிக்க வழி வகை செய்ய வேண்டும் கர்நாடக தமிழர்கள் தமிழை மறக்கும் அவலத்தில் இருந்து காக்க பட வேண்டும்


c.chandrashekar
ஜூன் 20, 2024 14:03

மிகவும் தேவையான ஒன்று 95% தமிழ் பள்ளிகள் மூடப்பட்டு விட்டன அல்லது கன்னட பள்ளிகளாக மாறி விட்டன இப்பொழுது உள்ள சில பள்ளிகளும் மிகவும் பழ அடைந்து ஆசிரியர்கள் மாணவர்கள் இல்லாமலும் மிகவும் கவலை படும் நிலையில் உள்ளது, அதே நேரத்தில் கடந்த 50 வருடங்களில் மிகவும் குறைவாக இருந்த உருது பள்ளிகள் பலமடங்கு அதிகரித்து உள்ளன இதற்க்கு அவர்களிடம் ஒற்றுமை காரணம். இப்பொழுது அதிகமான ஆங்கில பள்ளிகளிலே தமிழ் மக்கள் ஆர்வம் காட்டுகிறார்கள் அப்படியான பள்ளிகள் குறைந்த பட்சம் மூன்றவது மொழியாக ஆவது தமிழை தெரிந்து எடுத்து படிக்க வழி வகை செய்ய வேண்டும் .


BBADRINARAYANAN
ஜூன் 19, 2024 18:06

Good decision


BBADRINARAYANAN
ஜூன் 19, 2024 18:05

Good


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை